• Sep 20 2024

பிரபல நடிகருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்…அதுவும் மூணு பொண்ணுங்களா...பொறாமைப்படும் சக நடிகர்கள்…!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவர் 2012 இல் வெளியான 'பில்லா 2' என்ற படத்தில் யங் பில்லாவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'சூது கவ்வும்', 'தேஜிடி', 'ஆரஞ்சு மிட்டாய்', '144' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

இவற்றை அடுத்து தற்போது புதிய படம் ஒன்றில் இவர் நடிப்பதாகவும் அதில் மூன்று கதாநாயகிகள் இவருடன் இணைந்து நடிப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் சமீபகாலமாகவே அசோக் செல்வன் நடிக்கும் திரைப்படங்களில் பல கதாநாயகிகள் இடம்பெறுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

அதாவது இவரது நடிப்பில் வெளியான படங்களான 'ஓ மை கடவுளே', 'மன்மத லீலை', 'வேழம்', மற்றும் 'நித்தம் ஒரு வானம்' ஆகிய படங்களில் பல கதாநாயகிகள் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்திலும் இவருக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அசோக் செல்வனின் இப்படத்தை இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் என்பவர் இயக்குகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் 'விஸ்வரூபம்' படத்தில் கமலஹாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார்.

அசோக் செல்வனின் இப்புதிய படத்தில் நடிகை மேகா ஆகாஷ், மலையாள நடிகை கார்த்திகா முரளிதரன் மற்றும் தெலுங்கு நடிகை சாந்தினி சவுத்ரி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைக்கின்றார்.

இத்திரைப்படத்தின் கதையம்சம் ஆனது பள்ளி, கல்லூரியினை மையமாக கொண்டு ரொமான்ஸ், காமெடி என அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும். மேலும் இப்படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் ஈரோட்டில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் அசோக் செல்வன் மீது சக நடிகர்கள் பொறாமைப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. இதற்கு காரணம் அடுத்தடுத்து ஒன்றிற்கு மேற்பட்ட கதாநாயகிகள் இவர் படத்தில் வருகின்றமையே ஆகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement