தமிழ் சினிமாவில் வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். அவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் என்பவரை காதலித்து ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரித்த பாலாஜி மோகன் நடிகை தன்யாவை ரகசியமாத் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதனை பிரபல நடிகை கல்பிகா கணேஷ் ஒரு பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இதனை அடுத்து திருமணம் செய்துகொண்டதை ஒப்புக்கொண்ட பாலாஜி மோகன், நடிகை கல்பிகா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் கல்பிகா தான் பேசியது எல்லாம் பொய் என கூறி மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
இதனை தொடர்ந்து பாலாஜி வழக்கை திரும்ப பெற்று இருக்கிறார். மன்னிப்பு வீடியோவை கல்பிகா நீக்க கூடாது என்கிற நிபந்தனையோடு வழக்கு முடித்துவைக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!