• Sep 20 2024

தனுஷை பார்த்து பொறாமைப்பட்ட மாதவன்: இது தான் காரணமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள தவிர்க்க முடியாத நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகர் மாதவன். ஆரம்பத்தில் காதல் படங்களில் நடித்து வந்தாலும் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியமுள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சாக்லேட் பாய் மாதவன் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தான் இயக்கியிருக்கும் ராக்கெட்ரி படத்தை விளம்பரம் செய்ய அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார் மாதவன். மேலும் விமானத்தில் இருந்து வீடியோ எடுத்து அதை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டுள்ளார்.

ராக்கெட்ரி படம் மூலம் மாதவன் இயக்குநராகியிருக்கிறார். இந்நிலையில் அவர் தனுஷ் பற்றி கூறியது குறித்து பேசப்பட்டு வருகின்றது.

பேட்டி ஒன்றில் மாதவன் தெரிவித்ததாவது..

நான் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்தேன். மேலும் தன் நடிகர்களை நன்கு புரிந்து வைத்திருப்பது தான் ஆனந்தின் சிறப்பு அம்சமே. ஒரு இயக்குநராக அவர் என்னிடம் சொல்லிய விஷயங்களை கேட்டு புல்லரித்துவிட்டது.மேலும் இது போன்று வேறு யாரும் ஏன் சொல்லவில்லை என்று தோன்றியது.

அத்தோடு தனுஷை பார்த்து பொறாமையாக இருக்கின்றது. மேலும் அவரின் அடுத்த படத்தை ஆனந்த் இயக்குகிறார். ஆனந்துடன் வேலை செய்யும் எந்த நடிகரை பார்த்தாலும் பொறாமைப்படுவேன் என்றார்.

ஆனந்த் எல். ராயின் ராஞ்சனா படம் மூலம் பாலிவுட் சென்றார் தனுஷ். அதன் பின்னர் ஆனந்த் இயக்கத்தில் அத்ரங்கி ரே படத்தில் நடித்தார். இந்நிலையில் மூன்றாவது முறையாக ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement