• Sep 20 2024

மூட்டை மூட்டையாய் வந்த காதல் கடிதங்களுக்கு ரிப்ளே எழுதிய மாதவன்- உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்தவர் நடிகர் மாதவன். இவர் முதன்முதலாக தமிழில் ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தால், அடுத்தடுத்து இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வீட்டு கதவைத் தட்டியது. இதனையடுத்து, ‘ரன்’, ‘மின்னலே’, ‘ப்ரியமான தோழி’, ‘ஜே ஜே’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார்.


அலைபாயுதே படத்தில் மாதவன் ஷாலினியின் கெமிஸ்டிரி சும்மா வேறமாதிரி இருந்தது. இருவரின் நடிப்பை பார்க்கவே திரையரங்கில் கூட்டம் அலை மோதியது. டீன் ஏஜ் பெண்கள் எல்லாம் மாதவன் மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு மாதவனுக்கு பல பெண் ரசிகர்கள் இருந்தார்கள்

அப்போது மாதவனை பேட்டி எடுப்பதற்காக நான் மாதவன் வீட்டுக்கு சென்று இருந்தேன். அப்போது அங்கு வந்த ஒரு போஸ்ட் மேன், மாதவனுக்கு மூட்டை மூட்டையாக கடிதம் வந்து இருக்கு என்னால் அனைத்தையும் கொண்டு வரமுடியவில்லை. உதவிக்கு யாரையாவது அனுப்புங்க என்று கேட்டார். உடனே மாதவன் தான் உதவியாளரிடம் காரை கொடுத்து அனுப்பினார்.


அப்போது மூட்டை மூட்டையாக ரசிகர்கள் எழுதி கடிதம், காதல் கடிதம், போட்டோ கேட்டு கடிதம் என அனைத்து கடிதமும் மலை போல குவிந்து இருந்தது. அந்த கடிதங்களை படித்து பார்த்து பதில் எழுவதற்கு என்றே தனியாக உதவியாளர் ஒருவரை வைத்து ஒவ்வொரு கடிதத்திற்கும் பதில் எழுதினார். அந்த அளவுக்கு மாதவன் ரசிகர்களை நேசித்தார் என்று செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement