தொகுப்பாளராக பல விருதினை பெற்றவர் தான் மாகா பா ஆனந்த்.இவர் ஆரம்ப காலத்தில் சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தார். ரேடியோ மிர்சி பண்பலையில் தொகுப்பாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், அது இது எது மற்றும் சினிமா காரம் காபி போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவராவார்.
கலைஞர்கள் எப்போதும் ஒரே துறையில் இருப்பது இல்லை. ஒன்றில் சாதனை செய்தால் வேறொரு கலையில் ஆர்வம் காட்டி வருவதும் தெரிந்ததே .அப்படி ரேடியா ஜாக்கியாக இருந்து பின் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களமிறங்கியவர் தான் மாகாபா ஆனந்த்.இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருப்பதும் தெரிந்த ஒன்றே.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரை, சூப்பர் சிங்கர் ஆகிய நிகழ்ச்சி உட்பட மேலும் ஒரு சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது மனைவியுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை மாகாபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "க்யூட் ஜோடி" எனக் கூறித் தமது கமெண்டுகளை குவித்து வருகினறனர்.
Listen News!