• Sep 20 2024

மதுமிதாவை வீட்டுக்கு வர வைத்த மகாலட்சுமி.. சீதாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! அதிரடி திருப்பங்களுடன் சீதா ராமன் சீரியல்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.

இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மகாலட்சுமி ராமிடம் சீதா நல்ல பொண்ணு என சொல்ல இதைக்கேட்டு சீதா சந்தோஷப்பட்ட நிலையில் மீரா சீதாவிடம் மகாலட்சுமியை நம்பாதே அவள் ஏதாவது திட்டம் வச்சிருப்பா என சொல்ல சீதாவுக்கும் சந்தேகம் எழுகிறது.

அடுத்ததாக மகாலட்சுமி சுபாஷ் உள்ளிட்டோரை அழைத்து ரிசப்ஷனில் நடக்கப் போவது என்ன ராம் மற்றும் மதுவை எப்படி ஒரே மாதிரியான டிரஸ் போட வைப்பது என தனது திட்டம் அனைத்தையும் சொல்கிறாள்.

மறுபக்கம் மாலினி தான் டாக்டரை சந்திக்க சென்னைக்கு போக போவதாகவும் தன்னுடன் உதவிக்கு வா என சொல்லி மதுவை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வருகிறாள். சென்னைக்கு வந்ததும் மாலினி மகாலட்சுமிக்கு போன் போட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என கேட்க அவள் மதுவை சீதாவுக்கு போன் செய்து பேச சொல் என தன்னுடைய திட்டத்தை சொல்கிறாள்.

மாலினி மதுவிடம் சீதாவுக்கு போன் போட்டு பேச சொல்ல மது சீதாவுக்கு போன் செய்து சென்னை வந்திருக்கும் விஷயத்தை சொல்ல சீதா அப்படின்னா நீங்க கண்டிப்பா வீட்டுக்கு வரணும் என சொல்லி மகாலட்சுமி வீட்டுக்கு அழைக்கிறாள்.


அதன் பிறகு மாலினி மற்றும் மதுமிதா என இருவரும் சீதாவை பார்க்க மகாலட்சுமி வீட்டுக்கு வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Advertisement

Advertisement