• Sep 20 2024

“குழந்தைங்க பார்க்க வேண்டாமாம் ”... மஹாலக்ஷ்மி கூட போட்டோசூட் எடுத்த ரவீந்தர்-தீயாய் பரவும் புகைப்படங்கள் இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பல படங்களை தயாரித்தும் விநியோகம் செய்து வரும் ரவீந்தர் சமீபத்தில் மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருப்பதாக ரசிகர்களுக்கு தெரிவித்து இருந்தார் .இவர்களது திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும் சமூக வலைதளத்தில் திருமணத்தை அதே அளவு விமர்சனம் செய்தும் வருகிறார்கள். 


மேலும் இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார் ரவீந்திரர்.திருமணத்திற்கு பிறகு  ரவீந்திரர் மற்றும் மஹாலக்ஷ்மி ஒரு சில பேட்டிகளை கொடுத்திருக்கிறார்கள். அந்த பேட்டியில் பேசிய ரவீந்திரர் எங்கள் திருமணத்திற்கு பின்னர் பலரும் மகாலட்சுமி இரண்டாம் திருமணம் செய்துவிட்டார் என்று தான் தலைப்புகளை போட்டு செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.



ஆனால், உண்மையில் எனக்கும் இது இரண்டாம் திருமணம் தான் என்று கூறியுள்ளார். ஆனால் என்னுடைய முதல் திருமண வாழ்க்கை குறித்து நான் அவ்வளவாக வெளியில் சொன்னது கிடையாது என்பதால் எனக்கு திருமணம் ஆனதே பலருக்கும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.மேலும் பல விசயங்களை பகிர்ந்த இருவரும் தமது காதல் எப்படிப்பட்டது என கூறினார்கள்.




இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு ஒரு அழகான போட்டோசூட் ஒன்றை நடத்தி உள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ் மற்றும் கெமண்களை பதிவிட்டு வருகின்றனர்.அத்தோடு அந்த போட்டோசூட்டை வெளியிட்டு குழந்தைங்க..பெரியவங்க..கர்ப்பினிப்பெண்கள் யாரும் பார்க்க வேண்டாம் என காமெடியாக கூறியுள்ளார்.






அத்தோடு தனது முகநுாலில் ஒரு பதிவையும் இட்டுள்ளார்.அதாவது ஏமாற்றம் நிறைந்த வாழ்க்கை என்றால் கடவுள் உனக்கென ஒருவரை நியமிப்பார்...எனக்கு புரிந்தது...Dunzo பெற்றார்... 😜😜😜என பதிவிட்டுள்ளார்.



Advertisement

Advertisement