• Sep 20 2024

சிறையில் வாடும் கணவன்... கவலையின்றி புதுச்சேலை அணிந்து மகாலட்சுமி செய்த செயல்... கடுப்பில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரைப்படத் தயாரிப்பாளராக பலராலும் அறிப்பட்டவர் தான் ரவீந்தர். இவர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர். 


இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை போன வருடம் திருமணம் செய்து கொண்டார். சிலர் வாழ்த்து கூறி இருந்தாலும் பலர் எதிர்மறை விமர்சனக்கருத்தையே முன்வைத்தார்கள். ஆனாலும் இத்தம்பதி அவ்வாறாக விமர்சனங்களுக்கு செவி சாய்க்காது தமது வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக முன்னெடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அதாவது திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் போலி ஆவணங்களைக் காண்பித்து பணத்தைப் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, கடந்த 7-ஆம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தர் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்நிலையில் இன்றைய தினம் உலகம் முழுவதும் விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு மகாலட்சுமியும் கணவன் ஜெயிலில் என்பதை மறந்து புது சேலை உடுத்து அதனை புகைப்படமாக எடுத்து "இதுவும் கடந்து போகும்" எனக் குறிப்பிட்டு அப்புகைப்படங்களை பதிவிட்டிருக்கின்றார்.

இதனை பார்த்த ரசிகர்கள் "உங்க கணவன் சிறையில் இருப்பது உங்களுக்கு கவலை இல்லையா" எனக்கேட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement