தயாரிப்பாளர் ரவீந்தரின் வீடியோவை பகிர்ந்து உருகியுள்ளார் அவரது காதல் மனைவியான விஜே மகாலக்ஷ்மி.
பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான மகாலக்ஷ்மி கடந்த முதலாம் தேதி பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். ரவீந்தர் தயாரிப்பில் விடும் வரை காற்று என்ற படத்தில் நடித்தார் மகாலக்ஷ்மி. அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
அத்தோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருப்பதியில் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர்.மேலும் இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வாரங்கள் ஆகியும் திருமணம் குறித்த சர்ச்சை தீர்ந்தப்பாடில்லை என்று தான் கூற வேண்டும்.
ஆனால் அதற்கெல்லாம் அசராத இருவரும் திருமணத்திற்கு பிறகும் உருகி உருகி காதலித்து வருகின்றனர். போட்டி போட்டுக் கொண்டு சமூக வலைதளங்களில் தங்களின் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று ரவீந்தருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த மகாலக்ஷ்மி என் கையை பிடித்துக்கொள்ளுங்கள், என் இதயத்தை பிடித்துக்கொள்ளுங்கள், எப்போதும் என்னை விட்டுவிடாதீர்கள் என உருகியிருந்தார்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு புகைப்படத்தையும் வீடியோவையும் ஷேர் செய்து உருகியுள்ளார் மகாலக்ஷ்மி. அதாவது திருமணத்திற்கு முன்பு நடந்த நளங்கு போட்டோவை ஷேர் செய்துள்ள மகாலக்ஷ்மி, ரவீந்தரின் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
ரவீந்தரின் ஜிம்மை மைய்யப்படுத்தி குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நகைச்சுவையாக உள்ள அந்த குறும்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மகாலக்ஷ்மி, ஒரு வருடத்திற்கு முன்பு இந்த வீடியோவை பார்த்து நான் அவரின் ஃபேன் ஆனேன், தற்போது அந்த வீடியோவை பெருமையுடன் பகிர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த பதிவு..
Listen News!