• Sep 20 2024

பாதியில் நின்றுபோன கல்யாணம்... கதறி அழும் நந்தினி... காவேரியின் கதையை முடிக்கத் துணிந்த பசுபதி... பரபரப்பான திருப்பங்களுடன் 'Mahanadhi' Promo Video..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி. அந்த வகையில் இந்த சீரியலில் நிவினுக்கும் தனது மகளுக்கும் திருமணத்தை பசுபதி நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இதனை காவேரியின் அப்பாவை ஏமாற்றி வாங்கிய தோட்டத்தில் தான் செய்கின்றார்.


இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் நந்தினியின் அம்மா இந்தக் கல்யாணம் நடக்குமா இல்லையா என பசுபதியிடம் கேட்கின்றார். அதற்குப் பசுபதி நடக்காமல் எப்படி போய்ட்டு உட்காரு என நிவினிடம் கூறுகின்றார். நிவின் போகாமல் நிக்க போங்க எனக் கூறிக் தள்ளி விழுத்துகின்றார்.


இதனையடுத்து கோபமடைந்த நிவினின் தாய் ஜெயா "அண்ணை கையை விடுங்க, மரியாதையாய் நடந்துக்கோங்க" என பசுபதியைத் திட்டுகின்றார். அதற்கு பசுபதி என்ன ஜெயா இப்படி நடந்துக்கிறாய் என்கிறார். பதிலுக்கு நிவினின் தந்தை உங்களுக்காக நாங்க சொந்தக்காரங்களிட்ட பட்டது எல்லாம் போதும், அசிங்கப்பட்டிட்டு இருக்கோம்டா என பசுபதியிடம் கூறுகின்றார்.

மேலும் ஜெயா "இந்தக் கல்யாணம் நடக்காது" என பசுபதியின் முகத்திற்கு நேராக கூறிவிட்டுச் செல்கின்றார். இதனையடுத்து நந்தினி மாலையைக் கழட்டி எறிந்து விட்டு நிலத்தில் விழுந்து கதறி அழுகின்றார். மேலும் பசுபதி "இவ்வளவும் நடந்ததற்கு காரணம் காவேரி தான், அவளை சும்மா விடக்கூடாது" எனக் கூறி மனதிற்குள் குமுறுகின்றார்.

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement