• Sep 20 2024

இனிமேல் இப்படியான படங்களில் நடிக்க மாட்டேன்... மாளவிகா மோகனன் எடுத்த திடீர் முடிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல மலையாள நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் ரஜினியின் 'பேட்ட' படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்த மாளவிகாவுக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புக்களும் வந்து குவியத் தொடங்கின.


அந்தவகையில் தற்போது தமிழ், பாலிவுட், மலையாளம் எனப் பிசியாக இருந்து வருகின்றார். அந்தவகையில் இவர் விஜய்யுடன் 'மாஸ்டர்', தனுஷுடன் 'மாறன்' போன்ற படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இனி தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க இருப்பதாகவும், ஏனைய படங்களில் நடிக்க மாட்டேன் எனவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.


அந்தவகையில் அவர் கூறுகையில் "நான் சினிமா துறையில் நுழைந்து குறிப்பாக 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இனிமேல் நான் சினிமாவைப் பொறுத்தவரையில் என்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன்" என்றார்.

மேலும் "அது ரூ.500 கோடிக்கு மேல் வசூலிக்கின்ற ஒரு பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும், அப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லையென்றால் அதில் நடிக்கப் போவதில்லை. ஏனெனில் அதில் என்னுடைய கதாபாத்திரத்தை யாரும் நினைவில் வைத்துக் கொள்ளமாட்டார்கள்" என்றார்.


அதுமட்டுமல்லாது "நான் சிறுவயது முதல் ரசித்து வளர்ந்த ஊர்வசி, ஷோபனா, கஜோல் உள்ளிட்ட நடிகைகள் அனைவரும் ரசிகர்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களைத் தான் தேர்வு செய்து நடித்தனர். எனவே நானும் அவர்கள் வழியிலேயே செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்" எனவும் மாளவிகா மோகனன் அப்பேட்டியில் ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement