நடிகை மாளவிகா சர்மா டாக்டர் படித்து விட்டு பலர் நடிகைகளாக வலம் வரும் நிலையில், வக்கீல் படிப்பை முடித்து விட்டு சினிமாவுக்கு ஹீரோயினாக வந்தவர் மாளவிகா சர்மா. பெற்றோரின் ஆசையை நிறைவேற்றிய இந்த அழகுப் புயல் தனக்கு பிடித்த சினிமாத் துறையை தற்போது தேர்வு செய்து நடித்து கலக்கி வருகிறார்.தெலுங்கில் அறிமுகமான மாளவிகா சர்மா தமிழ், இந்தி என பான் இந்தியா நடிகையாக மாறி உள்ளார்.
தெலுங்கில் 2 படங்களில் நடித்த மாளவிகா சர்மா தமிழில் சுந்தர். சி இயக்கத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், அம்ரிதா அய்யர், ரைசா வில்சன், டிடி நீலகண்டன் உள்ளிட்ட பலர் நடித்த காபி வித் காதல் படத்தில் மெழுகு சிலையாக நடித்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார்.
ஆனால், தமிழில் மாளவிகா சர்மா நடித்த அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், சமீபத்தில் வெளியான சல்மான் கான் படத்தின் மூலம் பாலிவுட்டுக்கே பறந்து விட்டார் மாளவிகா சர்மா.
இந்நிலையில் 40 பள்ளிகளில் உள்ள பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அரசு பள்ளிக்குச் சென்ற நடிகை மாளவிகா சர்மா அந்த மாணவர்களுக்கு செருப்புகளையும், புத்தகங்கள், புத்தகப் பைகளையும் பரிசாக வழங்கி உள்ளார்.
அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தியோகரில் உள்ள தேவ்ஸ்ரீ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த பணியை ஆற்றி உள்ளேன் என்றும் நீங்களும் உதவ நினைத்தால், அந்த தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என பதிவிட்டுள்ளார்.
நடிகை மாளவிகா சர்மா பள்ளிக் குழந்தைகளின் பாதங்களை தொட்டு செருப்பு மாட்டி விடும் போட்டோக்களை பார்த்த அவரது ரசிகர்கள் பெரிய மனசுங்க உங்களுக்கு என பாராட்டி வருகின்றனர்.
Listen News!