• Sep 20 2024

செழியனுக்கு தொல்லை கொடுக்கும் மாலினி- போகவே கூடாது என்று கண்டிஷன் போட்ட பாக்கியா- கோபியை மாட்டி விட்ட எழில்-Baakiyalakshmi Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கிலட்சுமி.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஹாஸ்பிட்டலில் இருக்கும் செழியனுக்கு மாலினி அடிக்கடி போன் செய்கின்றார். அப்போது செழியன் தான் ஹாஸ்பிட்டலில் இருப்பதாகவும் இப்போ வர முடியாது எனக்கு குழந்தை பிறந்திருக்கு என்று சொல்லவும் மாலினி தன்னைப் பார்க்க வரச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றார். இதனால் மாலினியின் போனை செழியன் கட் பண்ணி விடுகின்றார்.


இதனால் கடுப்பான மாலினி என்ன செய்வதென்று தெரியாது தன்னுடைய கையை அறுக்கப்போகின்றேன் என்று சொல்லி வாய்ச் மெசேஞ் அனுப்ப செழியன் பயந்து போய் கிளம்ப அப்பேர் அங்கு பாக்கியா வந்து எங்க போற ஆபிஸிற்கு என்று மட்டும் சொல்லாத இப்போ உனக்கு குழந்தை பிறந்திருக்கு அங்க எல்லாம் போக முடியாது என்கின்றார்.

இருந்தாலும் செழியன் சமாளித்து விட்டு மாலினியைப் பார்க்கச் செல்கின்றார். மாலினி வீட்டுக்கு வந்த செழியன் மாலினியை அடிக்க கை ஓங்குவதோடு திட்டுகின்றார். அப்போது மாலினி தன்னால் பார்க்காமல் இருக்க முடியாது என்று அழுது கொண்டுசெழியனிடம் பேச செழியன் சமாதானம் ஆகின்றார்.

மறுபுறம் செழியன் ஆபிஸிற்கு போய் விட்டதாக நினைத்து ஜெனி செழியன் பாவம்ல ஆன்ட்டி ஆபிஸ்ல ரொம்ப தான் வேலை கொடுக்கிறாங்க என்று சொல்கின்றார். மேலும் மாலினி இரவு தன்னுடன் நிற்க சொல்லி செழியனை வற்புறுத்த முதலில் மறுப்புத் தெரிவித்தாலும் பின்னர் ஓகே சொல்லி மாலினியுடனே தங்கி விடுகின்றார்.


தொடர்ந்து விடிந்ததும் செழியன் மாலினியை சமாதானப்படுத்தி விட்டு வீட்டுக்கு திரும்புகின்றார். மேலும் எழில் தன்னுடைய வீட்டிலிருந்து போன் பேசிட்டு இருக்கும் போது இருவர் வந்து அழைத்து கோபி இருக்கிறாரா என்று கேட்கின்றனர். அப்போது  எழில் அப்பிடி இங்கு யாரும் இல்லை என்று சொல்லி விட்டு பின்னர் என்ன பிரச்சினை என்று கேட்கின்றார்.

அப்போது அவர்கள் கோபிநாத் கிரடிக் பில்லு கட்டல, அதான் தேடி வந்தோம் என்று சொல்ல எழில் மாட்டி விட வேண்டும் என அவருடைய வீட்டைக் காட்டி விட அவர்களும் கோபியின் வீட்டுக்குச் செல்கின்றனர். கிரடிட் காட் விஷயமாக வந்திருக்கிறோம் என்று சொல்ல கோபி வெளியில் கூட்டிட்டு போய் சீக்கிரமாவே பணம் கட்டுறேன். அதுக்காக வீட்டுக்கெல்லாம் வந்திடாதீங்க என்று சொல்லி அனுப்பி வைக்கின்றார்.


பின்னர் ராதிகா எதுக்கு அவங்க வந்தாங்க என்று கேட்க கிரடிட் காட் வாங்க சொல்லி என்னை தொல்லை பண்ணுறாங்க அதுக்காகத் தான் வந்தாங்க என்று சொல்லி சமாளித்து விட்டு ஆபீஸிற்கு போகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement