• Sep 20 2024

பாக்கியா குடும்பத்தை பதறவைத்த மாலினி! கழுத்தை நெறிக்கும் கடனில் கோபி! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் குறித்த சீரியலின் இன்றைய எபிசோட்  வெளியாகியுள்ளது. அதில்  என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். 

மாலினியுடன் செழியன் போனில் பேசிக் கொண்டிருக்க, அந்த இடத்திற்கு  பாக்கியா வந்து விட உடனடியாக போனை கட் செய்து முழிக்கிறார் செழியன். இதற்கு பாக்கியா, 'போன்ல யாரு என்ன ஏது' என்று விசாரிக்க 'ஆபீஸ் கால்' என்று சொல்லி சமாளிக்கிறார். 'அந்த மாலினி தானே ஏதாச்சும் சொல்லி மிரட்டுறாளா என்ன?' என்று கேட்க அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என கூறி உள்ளே சென்று விடுகிறார் செழியன்.

மறுபக்கம், கோபி வாக்கிங் செல்ல அங்குவந்தவர்கள் 'என்ன ஹார்ட் அட்டாக்கா' என்று விசாரிக்க, 'அதெல்லாம் எதுவும் இல்லை' என்று சொலிக்கிறார் கோபிஇதன்போது, அந்த வழியாக பாக்கியா வர, 'சாருக்கு ஹார்ட் அட்டாக் நீங்க கேட்க மாட்டீங்களா' என்று கேட்க 'அதுக்கு நான் என்ன பண்ண முடியும் நான் என்ன கார்டியாலிஸ்ட்டா' என்று சொல்லி நகர்கிறார் பாக்கியா.


அதன்பின் வீட்டிற்கு வந்த கோபிக்கு கிரெடிட் கார்ட் பணம் கேட்டு பேங்கில் இருந்து வந்து அதிர்ச்சி கொடுக்கின்றனர். இதற்கு கோபி, ஒரு மாசம் டைம் கேட்டுக் கொண்டிருக்க பாக்யா வந்துவிடுகிறார். உடனே அவர்களிடம் வேறு எதையோ பேசி சமாளித்து அனுப்பி வைக்கிறார் கோபி.

இதையடுத்து ராதிகா வந்து நிற்க, 'ஹாய் பேபி எப்படி இருக்க' என்று ராதிகாவை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார் கோபி. ஆனாலும் ஈஸ்வரி அங்கே உடனே வந்து 'வா கோபி' என வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்.

அதைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும் மாலினி அனைவரின் நலத்தை விசாரித்ததோடு செழியன் எங்கே என கேட்கிறார். அதற்கு ஜெனி 'அவர் முக்கியமான விஷயமா வெளியே போய் இருக்கார்' என்று சொல்கிறார்.


ஆனா மாலினி, 'நான் போன் பண்ணா இப்ப 5 நிமிஷத்துல இங்க இருப்பான்' என்று சொல்லி போன் போட, பதறி அடித்து ஓடி வருகிறார் செழியன். இதை பார்த்து எல்லோரும் ஷாக்காகின்றனர். அடுத்ததாக மாலினி ஜெனியிடம் குழந்தையை வாங்கி வைத்துக்கொள்ள மாலினியையும் செழியனையும் தவிர மற்ற எல்லோரும் ரூமுக்கு சென்று விடுகின்றனர்.

அந்த நேரத்தில்,  ஆபீஸ் கால் பேச வெளிய போகிறார் செழியன். இதை கவனித்த  மாலினி குழந்தையை ஓரிடத்தில் மறைத்து வைத்து விடுகிறார்.அதன் பிறகு ஜெனி வந்து குழந்தையைக் கேட்க, செல்வி அக்கா வாங்கிட்டு போய்ட்டாங்க என்று பொய் சொல்ல, 'சாமி சத்தியமா என்கிட்ட குழந்தைய தரல' என்று சொல்கிறார் செல்வி. 

இறுதியில் எல்லோரும் குழந்தையை காணவில்லை என்று பதற்றம் அடைந்து தேடுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.




Advertisement

Advertisement