விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் குறித்த சீரியலின் மற்றுமொரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.
குறித்த ப்ரோமோவில், வீட்டிற்கு வரும் மாலினி செழியனின் குழந்தையை ஒழித்து வைத்து வைக்கிறார்.சிறிது நேரத்தின்பின் அங்கு வந்த ஜெனி 'குழந்தை எங்க' என கேட்க, தான் செல்வி அக்காவிடம் கொடுத்ததாக பொய் சொல்லுகிறார்.
இதையடுத்து, பாக்கியா மற்றும் அவரது முழுக்குடும்பமும் இணைந்து பதட்டத்துடன் தேடி வருகின்றனர்.அதன்பின், மாடிக்கு சென்ற மாலினி ஒழித்து வைத்த குழந்தையை தூக்கிக் கொண்டு வருகிறார்.
இதன்போது, 'பாப்பா எப்படி மேல போச்சு' என பாக்கியா கேக்க, 'நான் தான் சும்மா ஃபன்னுக்காக ஒழித்து வைத்தேன்' என கூறுகிறார் மாலினி. இதை கேட்ட பாக்கியா கோவத்தில் 'நானும் ஒரே பாத்துட்டு இருக்கன் உன் விளையாட்டு எல்லாம் ஓவரா இருக்கு.இனி உன் ஆபிஸ் வேலைய ஆபிஸ்ல மட்டும் பாரு.இனி வீட்டு பக்கம் வராத' என மாலினியை வீட்டை விட்டு விரட்டுகிறார் பாக்கியா.இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
இனி அடுத்துவரும் நாட்களில் மாலினி செழியனை மிரட்ட பல கிறுக்குத்தனங்களை செய்வார் என நம்ப முடிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!