• Sep 20 2024

மல்லிகாவா? காதாம்பரியா?- வீட்டை விட்டு வெளியேறியது யார் தெரியுமா?- மௌனராகம் சீரியலில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மௌனராகம் சீசன் 2. இந்த சீரியல் தற்பொழுது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

அதன்படி ஸ்ருதிக்கும் கதாம்பரிக்கும் உண்மை எல்லாம் தெரிந்து விட்டது. அதாவது ஸ்ருதி கார்த்திக்கின் பிள்ளை இல்லை என கார்த்திக்கிற்கு எப்பவோ தெரிந்தும் அதை எல்லாம் காட்டிக் கொள்ளாமல் கார்த்திக் இருந்திருக்கிறார்.


இதனால் கதாம்பரியும் ஸ்ருதியும் கார்த்திக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளதோடு கதாம்பரி கார்த்திக்கின் வீட்டை விட்டு வெளியே செல்ல போவதாக முடிவெடுத்திருந்தார். அவரைப் போல மல்லிகாவும் தானும் வீட்டை விட்டு வெளியேறப்போவதாக கூறினார்.


இதனால் கார்த்திக் என்ன முடிவு எடுப்பார் யாருடன் வாழப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது. ஆனால் கார்த்திக் இருவரையும் வீட்டை விடடு அனுப்பாமல் தன்னுடனே இருக்க சொல்லி சொல்கின்றார். அதற்கு இருவரும் சம்மதித்து கார்த்திக்குடன் இருக்கப் போகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஷுட்டிங்கில் இறுதி நாளில் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement