• Sep 21 2024

பொன்னியின் செல்வன் 2 விழாவுக்கு ரஜனியை அழைக்காத மணிரத்னம்... இந்த கோவம் தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் படம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 

மேலும் அந்த படம் ரூ. 500 கோடி வசூல் செய்தது. இதையடுத்து பொன்னியின் செல்வன் 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாக உள்ளது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான அகநக பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று மாலை நடந்தது.அத்தோடு அந்த விழாவில் ட்ரெய்லரை வெளியிட்டார்கள். பொன்னியின் செல்வன் 2 பட விழாவில் உலக நாயகன் கமல் ஹாசன், பாரதிராஜா, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். ஆனால் ரஜினிகாந்த் வரவில்லை.

முன்னதாக நடந்த பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினியும், கமலும் ஒன்றாக மேடையில் பேசியது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.மேலும்  அவர்களை மீண்டும் சேர்த்து பார்க்கலாம் என்று நினைத்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். இவ்வாறுஇருக்கையில் தான் ரஜினியை அழைக்கவில்லை என்று தகவல் வெளியானது.

பொன்னியின் செல்வன் பட விழா அழைப்பிதழில் கமலின் பெயர் முதலில் இருந்ததாகவும், ரஜினியின் பெயர் இரண்டாவதாக இருந்ததாகவும் இது சூப்பர் ஸ்டாருக்கு பிடிக்கவில்லை என்றும் அப்பொழுது கூறப்பட்டது. எனினும் இதையடுத்து ரஜினியின் பெயரை முதலில் போட்டார்களாம். ரஜினி செய்த இந்த காரியம் மணிரத்னத்திற்கு பிடிக்கவில்லை. அதனால் தான் பொன்னியின் செல்வன் 2 நிகழ்ச்சிக்கு ரஜினியை அழைக்கவில்லை என்று தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை.

அழைப்பிதழில் யார் பெயர் முதலில் இருக்க வேண்டும் என்பதற்காக கோபப்படும் ஆள் இல்லை ரஜினி. அத்தோடு  பொன்னியின் செல்வன் 2 பட விழாவில் ரஜினி கலந்து கொள்ளாததற்கு காரணம் இருக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. அத்தோடு அந்த படத்தின் ஷூட்டிங்கில் இருப்பதால் தான் மணிரத்னம் பட விழாவுக்கு ரஜினி வரவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

பொன்னியின் செல்வன் 2 படத்தை போன்றே ரஜினி நடிக்கும் லால் சலாம் மற்றும் தலைவர் 170 ஆகிய படங்களை லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. அத்தோடு அப்படி இருக்கும்போது பொன்னியின் செல்வன் 2 விழாவுக்கு ரஜினியை எப்படி அழைக்காமல் இருப்பார்கள். ரஜினியை அழைத்தார்கள் ஆனால் ஜெயிலர் பட வேலையால் தன்னால் வர முடியாது என்று கூறிவிட்டார் என தகவல் வெளியாகியிருக்கிறது.


Advertisement

Advertisement