தமிழ் சினிமாவின் பல ஸ்டீரியோடைப்களை உடைத்து சுக்குநூறாக்கியவர் பாரதிராஜா. தேனியில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னைக்கு வந்தவர், கிராமங்களை நோக்கி சினிமாவை அழைத்துச் சென்றார். செம்மண் பூமியும், கிராமத்து வாசமும் பாரதிராஜாவினுடைய படங்களின் மையமாக அமைந்துவிட்டது.
இவரது முதல் படமான 16 வயதினிலே இன்றளவும் தமிழ் சினிமா கொண்டாடும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. இதனை தொடர்ந்து, காதல் ஓவியம், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள் என அவர் கொடுத்த படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் நடிப்பிலும் பாரதி ராஜா ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநரான மணிரத்னம் இன்று பாரதி ராஜாவை சந்தித்திருக்கிறார். இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பாரதிராஜா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,"மணி என்னை சந்தித்தபோது" என குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன் வீடியோ ஒன்றையும் பாரதிராஜா பகிர்ந்துள்ளார். அதில் மணிரத்னத்திற்கு பொன்னாடை போர்த்துகிறார் பாரதி ராஜா. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.
Mani I am so happy... Thank you..@ManiRatnamFC pic.twitter.com/tFcfzVbOGR
Listen News!