பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது தற்பொழுது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.தற்பொழுது 7 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவருமே பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் தான் உள்ளே நுழைகிறார்கள். அப்படி பெரிய கனவுகளுடன் பிக்பாஸில் நுழைந்தவர் தான் மணிகண்டா ராஜேஷ்.
பிரபல திரைப்பட நாயகி ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனான இவர் சீரியலிலும் நடித்துள்ளார், ஆனால் அவ்வளவு பெரிய ரீச் எல்லாம் இல்லை.
அதாவது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mr & Mrs சின்னத்திரையில் தனது மனைவியுடன் சேர்ந்து கலந்துகொண்டார்.
இதன் பின் பிக்பாஸ் 6வது சீசனில் பங்குபெற்ற இவர் 85 நாட்கள் வரை வீட்டில் விளையாடியுள்ளார், கடந்த வாரம் தான் வீட்டைவிட்டு வெளியேறினார். பிக்பாஸிற்கு பிறகு மணிகண்டா முதன் பதிவு போட்டுள்ளார்.
அதில் பலருக்கு நன்றி தெரிவித்துள்ளார், இதோ அவரது பதிவு,
Listen News!