• Sep 20 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மணிகண்டன் கொடுத்த முதல் இன்டர்வியூ- அசீம் பற்றி இப்படி எல்லாம் சொல்லுறாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது 80 நாட்களைக் கடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் எவிக்டாகிப் போன மணிகண்டன் முதல் முதலாக பேட்டியளித்துள்ளார்.

அந்த வகையில் அதில் அவர் கூறியதாவது பிக்பாஸ் வீட்டிலிருந்து வீட்டுக்கு போனது சந்தோசம் தான். நான் வீட்டை போகும் போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்து விட்டது.அதாவது அம்மா எக்கு ஆரத்தி எடுக்கும் போது அவங்க தவறி கீழே விழுந்திட்டாங்க இதனால் இரண்டு நாள் ஹொஸ்பிட்டலில் இருந்தாங்க இப்போ ஓகே குணமாகி இருக்கிறாங்க என்று கூறினார்.


மேலும் இப்போ நடக்கிற 15 நாட்களை ரொம்ப மிஸ் பண்றேன்.100 நாட்கள் வீட்டுக்குள் இருக்க முடில என்ற கவலை எனக்கு இருக்கு. ஆனால் மற்றவங்க சூப்பராக தான் விளையாடிட்டு தான் இருக்கிறாங்க. மேலும் பிக்பாஸ் வீட்டுக்குள்ள எனக்கு பிடிச்சவங்க என்றால் எல்லாரையும் பிடிக்கும்.

ஆனால் கதிரவன் அசீம் மைனா நந்தினி எல்லோரையும் ரொம்ப பிடிக்கும் தனலக்ஷ்மி இருக்கும் போது மணி மணி என்று பாசமாகக் கூப்பிடுவா. அதெல்லாம் நல்லா இருக்கும். மேலும் இந்த வீட்டில கதிர் மட்டும் தான் வெளியில இருக்கிற மாதிரி இருக்கிறான். இப்போ தான் அவன் பேசவே ஆரம்பிச்சிருக்கிறான் இதை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கு.


மேலும் அசீம் குழந்தை மாதிரி அவன் மற்றவங்க கலாய்த்தால் எல்லாம் ஏற்றுக் கொள்வான். அசீமை ஒரு மாதிரி பார்த்திருப்பீங்க ஆனால் அவன் ரியல் காரெக்டர் வேற எல்லோருடனும் பஃன்னாக இருப்பான். அதே போல விக்ரமன் பார்த்தீங்க என்றால் பொம்மை டாஸ்க்ல இருந்து அவருக்கும் எனக்கும் செட் ஆகல. ஆனால் அவர் நல்ல கொள்கைகள் எல்லாம் வச்சிருக்கிறாரு. பிக்பாஸ் டைட்டில் வின் பண்ணினால் கூட அதை கடமைக்காகத் தான் செலவழிப்பார் என்று கூறினார். அவர் ஒரு நல்ல மனிதர் என்று கூறினார்.

மேலும் மைனாவை சின்னத்திரையில் இருந்து தெரியும் அதனால தான் பிக்பாஸ்ல போனதுக்கு பிறகு ரொம்ப கனெக்ட் ஆகிட்டோம்.ரச்சிதா ஒரு பரிசுப் பொதி மாதிரி ஆனால் அவங்க எந்தவொரு ஒப்பீனியனும் கொடுத்ததில்லை. நாங்களே எதிர்பார்த்தோம் அவங்க கிட்டையே கேட்கிருக்கிறேன். ஆனால் அவங்க நான் அப்படித் தான் என்று கூறியிருந்தார். அவர் வெளியில வந்ததுக்கு பிறகு தான் அவங்களை பற்றி தெரியும்.

நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததுக்கு பிறகு ஏடிகே பற்றி தான் தேடிப் பார்த்தேன். அப்போ தான் தெரிஞ்சது அவரு ஏ.ஆர் ரகுமானுடன் இணைந்து நிறைய பாட்டு எல்லாம் பாடி இருக்கிறாரு. அவர் வெளியில் வந்ததுக்கு பிறகு அவருக்கு நல்ல லைஃப் இருக்கு என்று நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.

மேலும் பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்கும் போது எனக்கு சர்ப்போட் பண்ணின மாதிரி வெளிய வந்ததுக்கு அப்பிறமும் பண்ணுவீங்க என்று நம்புகின்றேன். உங்க அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement