விஜய் டிவியில் குக் வித் கோமாளி 4 ஆவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இதிலிருந்த அண்மையில் மணிமேகலை வெளியேறினார். கடந்த மூன்று சீசன்களிலும் குக் வித் கோமாளி தொடரில் கலந்துகொண்டு பெரும் வரவேற்பை பெற்ற இவர் திடீரென வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில்,"இனி நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரமாட்டேன் என்பதை நானே வருவேன் கெட்டப் மூலமாக அறிவிக்கிறேன். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் என் முதல் எபிசோடிலிருந்து என்னுடைய எல்லா பெர்ஃபாமன்ஸ்களுக்கும் நீங்கள் அன்பும் ஆதரவும் அளித்திருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளிலும் நான் அதிக கவனம் செலுத்தி சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறேன். குக் வித் கோமாளியில் உங்களை கொஞ்சம் மகிழ்வித்திருப்பேன் என நம்புகிறேன். நான் இனிமேலும் உங்கள் அன்பை எதிர்பார்க்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மணிமேகலையும் அவரது கணவர் ஹூசைனும், சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டுவதற்கு பாலக்கால் பூஜை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட மணிமேகலை, பிரபல சேனலுக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட டைகர் கார்டன் தங்கதுரை, நாஞ்சில் விஜயன், விஜய் டிவி ராமர் என பலரும் பேசினார்.
இதில், “மணிமேகலை ஏன் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறினார், மணிமேகலை கர்ப்பமா?” என்று வரும் செய்திகளுக்கு ரியாக்ட் பண்ணிய மணிமேகலை, “நான் குக் வித் கோமாளியை மிஸ் பண்ணுகிறேன்” என தெரிவித்தார். இதேபோல், டைகர் கார்டன் தங்கதுரை பேசும்போது, “மணிமேகலை குக் ஆவதற்காக முயற்சி செய்கிறார். ஆகவே அடுத்த 5வது சீசனில் குக்காக வருவார்” என குறிப்பிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!