• Sep 21 2024

குக்வித்கோமாளி நிகழ்ச்சியில் மீண்டும் என்ட்ரி கொடுத்த மணிமேகலை- இந்த முறை கோமாளியாக வரவில்லையா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல்யமான ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி.இந்நிகழ்ச்சியில் கோமாளிகளுடன் சேர்ந்து குக்குகள் செய்யும் காமெடி அலப்பறைகள் தான் ஹைலைட் எனலாம். இதுவரை குக் வித் கோமாளில் நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிவடைந்து தற்பொழுது 4வது சீசன் நடைபெற்று வருகின்றது.

முதலில் 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வைல்டு கார்டு எண்ட்ரியும் வந்தது. இப்படி திடீர் டுவிஸ்ட்கள் நிறைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், சிம்பு, ஆர்.ஜே.பாலாஜி என ஏராளமான சினிமா பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு இருக்கின்றனர்.


மேலும் இந்த நிகழ்ச்சியில் முதலாவது பைனலிஸ்ட்டாக ஷிவாங்கி தேர்வாகியுள்ளார். இதனால் ஷிவாங்கியை பேவரிஷம் பார்த்துத் தான் தேர்வாக்கினர்கள் என்றும் கூறப்பட்டது. இது ஒரு பறும் இருக்க இதில் கோமாளியாக நடித்து வந்த மணிமேகலை இந்த சீசனில் இருந்து அண்மையில் விலகினார். 


இதனை அடுத்து தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மணிமேகலை குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.இதனால் திடீரென இவர் விசிட்டடித்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement