தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை மஞ்சிமா மோகன். இவர் கௌதம் மேனனின் இயக்கத்தில் உருவான 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் முதன்முதலாக ஹீரோயினாக நடித்தவர்.
இப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்திய இவர் 'தேவராட்டம்' படத்தில் கௌதம் கார்த்திக் உடன் சேர்ந்து நடிக்கும் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். அப்படத்தின் போது இருவரும் நிஜத்திலும் காதலிக்கத் தொடங்கினர்.
இவ்வாறு காதலில் விழுந்த இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். அதாவது வரும் நவம்பர் 28ம் தேதி தான் அவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இருப்பினும் இதுபற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவர்கள் இருவரும் இன்னும் வெளியிடவில்லை.
இந்நிலையில் தான் மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த மொத்த பதிவுகளையும் நீக்கி இருக்கின்றார். திருமணத்திற்கு முன் இப்படி ஒரு விஷயத்தை ஏன் செய்தார் என பலரும் இது குறித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் கூறுகையில் "இன்ஸ்டாகிராம் மக்களுடன் connect ஆக ஒரு சிறந்த இடம், நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் என வருத்தப்படுவதற்கான இடம் அல்ல. அதனால் தான் எனது போட்டோக்களை archive செய்துவிட்டேன். தற்போது முதலில் இருந்து மீண்டும் பதிவிடத் தொடங்கி உள்ளேன்" என சர்வ சாதாரணமாக தெரிவித்து இருக்கின்றார் மஞ்சிமா மோகன்.
Listen News!