• Sep 20 2024

அஜித், சூர்யா, தனுஷ் இரங்கல் தெரிவிக்காதது ஏன்..? கடுப்பில் மனோபாலா ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் மனோபாலா நேற்றைய தினம் உடல்நலக்குறைவினால் அவரது இல்லத்தில் மரணமடைந்திருந்தார். இதனைத் தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்றும் சமூக வலைத்தளங்களின் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் ஒரு சில நடிகர், நடிகைகளோ இரங்கல் தெரிவிக்காது அமைதி காத்து வருகின்றனர். இதற்கு காரணம் என்ன என ரசிகர்கள் பலரும்  கேள்வி எழுப்பி வருகின்றனர். 


அந்தவகையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தமிழ்நாட்டில் இல்லாமையினால் மனோபாலாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழலிலும் நேற்றே உடனடியாக மனோபாலா மறைவு செய்தி அறிந்ததுமே அவருக்கு தங்களுடைய இரங்கலினைத் தெரிவித்து இருந்தனர். 

அதேபோன்று விஜய், ஆர்யா, விஜய்சேதுபதி, சமுத்திரகனி, சித்தார்த் உள்ளிட்ட பலரும் மனோபாலாவின் வீட்டிற்கு சென்று நேரிலேயே வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர். சமீபத்தில் இடம்பெற்றிருந்த நடிகர் அஜித்தின் தந்தை மறைந்த செய்தி கேட்டு விஜய் உள்ளிட்ட பலரும் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். 


ஆனால் அஜித்தோ மற்ற எந்தவொரு சினிமா பிரபலங்கள் மறைந்தாலும் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதே இல்லை என்கிற விமர்சனம்  அடிக்கடி எழுந்து வரும் நிலையில், தற்போது மனோபாலாவின் மறைவுக்கும் அவர் வரவில்லை. இருப்பினும் அஜித் சார்பாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார். இதனால் ஷாலினியாவது வந்து அஞ்சலி செலுத்தி இருக்கலாமே என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

மேலும் நடிகர் சிவகுமார் நேற்றே நேரில் சென்று அஞ்சலியதோடு கார்த்தி ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார். ஆனால் சூர்யா இதுவரை ஒரு ட்வீட் கூட போடவில்லை எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதேபோல் நடிகர் தனுஷும் மனோபாலா மறைவுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லையே ஏன் என ரசிகர்கள் விளாசி வருகின்றனர். 


அதுமட்டுமல்லாது ட்விட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்த சிவகார்த்திகேயன் நேரிலாவது சென்று இரங்கல் தெரிவித்து இருக்கலாமே. அவர் வீடும் அங்கே தானே உள்ளது எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதேபோன்று மனோபாலாவுடன் இணைந்து நடித்த நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட பலரும் கூட இரங்கல் தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டுக்களை ரசிகர்கள் அடுக்கி உள்ளனர்.

Advertisement

Advertisement