தளபதி விஜயின் அசாத்தியமான நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அப்படத்தில் நடித்த நடிகர் மன்சூர் லியோ தொடர்பாக தனது கருத்தை முன்வைத்தார்
விஜய் ஹீரோவாக நடித்துள்ள படத்தில் நடிகர் மன்சூர் சின்ன ரோலில் நடித்துள்ளார். இந்த லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் லியோ திரைப்படத்தில் ஒரு கைதி கதாபாத்திரத்தில் நடித்த மன்சூர் அதில் சிறப்பாக நடித்து lcu வில் இடம்பிடித்துள்ளார்.
மன்சூர் சமீப காலமாகத்தான் நல்ல ரோல்களை தெரிவு செய்து நடித்து வருகிறார். இதற்கு முன்னர் அவர் நடித்தது வில்லன் கதாபாத்திரத்தில் மட்டும் தான். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் மன்சூரின் தீவிர ரசிகன் என்பது பலருக்கும் தெரிந்த விடையம். 2010 ஆண்டு ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி அடைந்த கைதி திரைப்படத்தை மன்சூர் அலிகானை மனதில் வைத்துத்தான் இயக்கியதாக லோகேஷ் கூறியுள்ளார்.
விக்ரம் படத்தில் இடம் பெற்ற "சக்கு சக்கு வத்திகுச்சி சட்டுணுதான் பத்திகிச்சி" பாடல் மன்சூர் அலிகான் நடித்த படத்தில் இடம் பெற்ற பாடலாகும். இதை அடுத்து லியோ திரைப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தை மன்சூருக்கு கொடுத்திருந்தார். ஒரு நேர்காணலின் பொது மன்சூர் அலிகாண் இவ்வாறு காமெடியாக பதிலளித்திருந்தார்.
500 கோடி முதல் போட்டு லட்சம் பேருக்கு வேலை கொடுத்து ஒன்றரை வருஷம் மினக்கிட்டு 1000 கோடி வசூலுக்கு பாடுபடுகிறோம். ஆனால் அரசியல் வாதிகள் ஒரு கையெழுத்து போட்டுவிட்டு 10 கோடி 20 கோடி ஆட்டைய போடுறான். இந்த லோகேஷ் என்னையவச்சி அந்தமாதிரி ஒரு படம் எடுக்கலாமில்ல. தம்மா துண்டு ரோலுக்கு அம்மா பெரிய பில்டப்பு என்று கூறியுள்ளார்.
Listen News!