• Sep 20 2024

உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்த மாரி செல்வராஜ்.. காப்பாற்றிய வடிவேலு, எப்படி தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறந்த படைப்புகளை தொடர்ந்து கொடுத்து வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து தற்போது மாமன்னன் எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும் போது, தான் பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறினார்.

அப்படி ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்யும் போது தற்கொலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடிதம் எழுதும் நேரத்தில் அங்கு வடிவேலுவின் நகைச்சுவையை கண்டு ரசித்து சிரித்துள்ளார்.

அதன்பின் தற்கொலை செய்யும் எண்ணத்தை விட்டுவிட்டாராம். தன்னை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றியது வடிவேலுவின் நகைச்சுவை தான் என மாமன்னன் வெற்றி விழா மேடையில் உருக்கமாக பேசினார் மாரி செல்வராஜ். 


Advertisement

Advertisement