தமிழ் சினிமா பிரபலங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் மாரிமுத்து. இவர் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் சமூக வலைத்தளப் பக்கம் ஒன்றில் இளம் பெண் ஒருவர் கவர்ச்சி புகைப்படம் பதிவிட்டு can i call you என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் மாரிமுத்துவின் பெயருடன் கூடிய டுவிட்டர் கணக்கு ஒன்றில் இருந்து உடனடியாக ரிப்ளை வந்ததை பார்த்து அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்ததோடு அதுவே தற்போது சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகி இருக்கின்றது.
இதனையடுத்து அவரின் மகன் கூறுகையில் "இது அப்பாவினுடைய நம்பர் தான், ஆனால் அந்த அக்கவுண்ட் அப்பாவோட இல்லை, தவறாக யாரோ பயன்படுத்துகிறார்கள் எனக் கூறி இருந்தார். இதையடுத்து மாரிமுத்து "அந்த கமெண்டை போட்டது நான் தான், இதில் என்ன தப்பு, என் மகன் எனக்கு கெட்டபெயர் வந்திடக்கூடாது என்பதற்காக சொல்லியிருக்கான்" எனக் கூறியிருந்தார்.
மாரிமுத்து இவ்வாறு சிக்கலில் சிக்கியமையைத் தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் அவருடன் இணைந்து ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கனகா ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதாவது "எடுத்த உடனே ஒரு ஆளைப் பற்றி தப்பாக பேசாதீர்கள், உண்மையிலும் அந்த நபர் அந்தத் தப்பை அவர் பண்ணியிருப்பாரா? அதற்கு பின்னணியில் அவர் தான் இருக்காரா? என்பதை உறுதி செய்து விட்டு தான் நாம் தப்பாக பேச வேண்டும்.
எங்களை பொறுத்தவரைக்கும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரம் எப்படி இருக்கோ அதே கதாபாத்திரத்தோட நிஜ கதாபாத்திரம் தான் மாரிமுத்து. பெண்களிடம் எப்போதுமே அவர் மரியாதையாக நடந்து கொள்வார். யார் கிட்டேயும் தப்பாக கூடப் பேச மாட்டாரு" என்றார்.
மேலும் "சமூக வலைத்தளங்களை நல்லதற்காக மட்டும் பயன்படுத்துங்கள், போஸ்ட், கமெண்ட் பார்த்திட்டு பிரபலங்களை பற்றி தப்பாக பேசாதீர்கள்" எனவும் கூறியுள்ளார்.
Listen News!