• Sep 20 2024

'எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்க மேடம்'-நடிகை ரோஜாவிடம் கேட்ட முதியவர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

1990 களில் தமிழ், தெலுங்கு துறைகளில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை ரோஜா. ரஜினி, பிரபுதேவா, சரத்குமார் இப்படி பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம்வந்த இவர், திருமணத்தின் பின்பு நடிப்பதிலிருந்து விலகி திடீரென ஆந்திர அரசியல் களத்தில் குதித்தார்

அத்தோடு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆந்திர மாநில அமைச்சரவை புதுப்பிக்கபட்ட போது நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது . அதன்படி சுற்றுலா,கலாச்சாரம்,மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், அரசின் நலத்திட்ட உதவிகள் யாவும் மக்களை சென்றடைகின்றதா என்பதை ஆய்வு செய்ய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டதை அடுத்து, நடிகை ரோஜா புத்தூர் மண்டலத்தில் உள்ள ஒட்டிகுண்டல என்கிற கிராமத்தில் கள ஆய்வு செய்தார். அங்குள்ள மக்களிடம் உள்ள குறைகளை வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது நடிகை ரோஜா ஒரு முதியவரிடம் சென்றுஉங்களுக்கு அரச நலந்திட்டங்கள் எல்லாம் கிடைக்கிறதா என கேட்க அதற்கு அந்த முதியவர் பென்ஷன் மட்டும்தான் கிடைக்கிறது என்று சொன்னார். உடனே உங்களுக்கு குழந்தைகள், இல்லையா? மனைவி என்ன செய்கிறார் என ரோஜா கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த முதியவர், எனக்கு மனைவி குழந்தைகள் இல்லை அதுதான் என் பிரச்சனை தயவு செய்து எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க மேடம் என்று கேட்டுள்ளார். இதற்கு நடிகை ரோஜா அரசு நலன் திட்ட உதவிகளில் பிரச்சினை என்றால் என்னால உதவி பண்ண முடியும் ஆனா நான் எப்படி உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும் என சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

https://www.youtube.com/embed/ccuEHJesbKM

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement