கடந்த 2007ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் பருத்தி வீரன். இப்படத்தில் கதாநாயகியாக ப்ரியாமணி நடித்திருந்தார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ப்ரியாமணிக்கு தேசிய விருதும் கிடைத்தது.இப்படத்தன் மூலம் தார் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகினார்.
முதல் படமே கார்த்திக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது. வசூல் ரீதியாகவும் எதிர்பார்க்கமுடியாது வசூலை பாக்ஸ் ஆபிஸில் குவித்தது.மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என்று அடிக்கஎ பேச்சுவார்த்தைகளும் கிளம்பியவாறு உள்ளன.
இப்படி ப்ளாக் பஸ்டர் ஹிட்டான இப்படத்தை பிரபல டாப் நடிகர் தான் முதன் முதலில் நடிப்பதாக இருந்ததாம். அந்த நடிகர் வேறு யாருமில்லை தளபதி விஜய் தான்.அதாவது விஜய்யை நடிக்க வைக்கத் தான் அமீர் திட்டமிட்டு இருந்தாராம்.
ஆனால், திடீரென விஜய்யால் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டதால், கார்த்தி இப்படத்தில் நடிக்க வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை . மேலும் அமீர் தற்பொழுது நடிப்பிலும் பிஸியாக இருந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!