விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.
வீணா ஆட்டோவில் சென்று கொண்டிருக்க எதிரில் பரசுவை பார்க்க அவர் இறங்கி வந்து ஆன்ட்டி எப்படி இருக்காங்க என நலம் விசாரிக்க அவர் முத்து நகை வைத்து பணத்தை கொண்டு வந்து கொடுத்து உதவி செய்த விஷயத்தை சொல்லி முத்துமேல எந்த தப்பும் இல்லை நீ அவன தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க என உண்மையை சொல்கிறார்.
இதன் பிறகு மீனா இந்த விஷயத்தை அவர் வீட்டில் சொல்லி இருக்கலாமே வீட்ல சொல்லி இருந்தா சந்தோஷம் தான் பட்டு இருப்போம் என கூறுகிறார். எனினும் மறுபக்கம் விஜயா பார்வதி வீட்டுக்கு வந்திருக்க அப்போது ரோகிணி விஜயா பேசியது எல்லாம் கேட்டுவிட்டு உங்கள மாதிரி அம்மா யாருக்கும் கிடைக்க மாட்டாங்க என கண்கலங்கி தன்னுடைய அம்மா இறந்து போயிட்டதாகவும் இறந்த இரண்டு மாதத்தில் என்னுடைய அப்பா என்ன விட மூணு வயசு கம்மியான பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு மலேசியாவில் பெரிய பணக்காரர் அவர் செய்தது பிடிக்காம சொந்த காலில் மிக்க நன்றி நான் கிளம்பி இங்க வந்துட்டேன் என டிராமா போடுகிறார்.
அத்தோடு ரோகிணி தான் கோடிக்கணக்கான சொத்துக்கு சொந்தக்காரி என போட்ட டிராமாவை விஜயா பார்வதியும் நம்பி விடுகின்றனர். அத்தோடு உடனே விஜயா நீ எதுவும் கவலைப்படாத உனக்கு நாங்க இருக்கோம் நீ எதுக்கு மேடம்னு சொல்லிட்டு இருக்க ஆன்டி என்று கூப்பிடு என்று சொல்கிறார்.
அதன் பின்னர் முத்து அடகு கடைக்கு வந்து மீனா விடம் போட்டுக் கொடுத்ததால் கோபப்பட்டு அவரை திட்டு பணத்தை எடுத்து கொடுத்து நகையை மீட்டு கொண்டு செல்கிறார். எனினும் இன்னொரு பக்கம் ரோகிணி தன்னுடைய தோழியுடன் தான் போட்ட டிராமாவை பற்றி சொல்கிறார்.
அத்தோடு மனோஜோட அம்மாவை கரெக்ட் பண்ணிட்டா கண்டிப்பா கல்யாணம் நடந்திடும் அதான் நேரடியா அவங்களுக்கு தூண்டில் போட்டுட்டேன் இன்னும் ஒரே வாரத்துல அவங்க வாயாலயே மனோஜை கல்யாணம் பண்ணிக்கிறியா நீ கேட்க வைக்கிறேன் என சவால் விடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Listen News!