• Sep 20 2024

தனம் பற்றிய உண்மைகளை மூர்த்தியிடம் சொல்ல போன மீனா- பரபரப்பான திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் யாரும் எதிர்பாராத விதமாக தற்பொழுது திருப்பம் நடந்துள்ளது.

அதாவது தனம் மார்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்.இந்த விடயம் மீனாவுக்கு மட்டுமே தெரிந்திருக்கின்றது.வேறு யாருக்கும் இந்த விடயம் தெரியாது. தனமும் யாரிடமும் சொல்லாமல் மௌனம் காத்து வருகின்றார்.


மேலும் தற்பொழுது சீரியலில் வளைகாப்பு நடைபெறுகின்றது. இநந்த வளைகாப்பு முடிந்தவுடன் இந்த விஷயத்தை எல்லோரிடமும் சொல்லப்போவதாக தனம் கூறியிருந்தார்.ஆனால் எல்லோரும் சிரித்துப் பேசுவதைப் பார்த்த தனம் இந்த விடயத்தை சொல்லாமல் மறைத்து விடுகின்றார்.

தனம் சொல்ல மறுத்தாலும் தான் எப்படியாவது இந்த விடயத்தை சொல்லியே ஆக வேண்டும் என்று மீனா வருகின்றார். ஆனால் மீனாவும் எல்லோரும் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து சொல்ல வேண்டுமா என யோசிக்கின்றார். இதனால் எப்படி குடும்பத்தாருக்குஇந்த விடயம் தெரிய வரும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement