• Sep 20 2024

எனக்கு மட்டும் ஏன் சேச்சி இப்படி நடக்குதுன்னு கேட்ட மீனா-கண் கலங்கிய பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் குழந்தை நட்சத்திரமாக படங்களில் அறிமுகமாகி தனது நடிப்பினாலும் திறமையினாலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து கதாநாயகி என்ற அளவிற்கு உயர்ந்தவர் நடிகை மீனா. கண்ணழகி என அழைக்கப்படுகின்ற மீனாவின் நடிப்பிற்கு மட்டுமன்றி அவரது அழகை ரசிப்பதற்கு என்றும் பெரிய அளவிலான இளைஞர் பட்டாளமே உண்டு. பார்த்திபன், விஜயகாந்த், அஜித், பிரபுதேவா, பிரபு எனப் பிரபல நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் பிஸியாக நடித்து வந்த மீனா பிரபல தொழிலதிபர் வித்தியாசாகர் என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு மணந்தார்.

இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற மகள் உண்டு. இவரும் தனது தாயை போன்று தற்போது குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்து வருகின்றார். குறிப்பாக நடிகர் விஜய்க்கு மகளாக 'தெறி' படத்தில் நடித்திருந்தமை நம் யாராலும் மறக்க முடியாது.

இந்நிலையில் கடந்த 27 ஆம் திகதி நடிகை மீனாவின் கணவர் சாகர் நுரையீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகளை மனைவியும் மகளும் செய்திருந்தனர். அதுமட்டுமல்லாது மீனாவின் கணவனின் இறுதிச் சடங்கினை மீனா மேற்கொள்ளும் வரைக்கும் மீனாவின் பல வருட நட்பும் நெருங்கிய தோழியுமான கலா மாஸ்டர் துணையாக இருந்தார்.

இந்நிலையில் மீனா பற்றிக் கலா மாஸ்டர் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் கூறுகையில் "மீனாவும் நானும் 25 ஆண்டுகள் தோழிகளாக இருக்கின்றோம். வித்யாசாகர் என்னை சேச்சி சேச்சி என்று தான் அழைப்பார். மீனாவினுடைய நல்லது கெட்டது எல்லாவற்றிலும் நான் இருப்பேன், நல்லதுல இல்லேன்னாலும் கண்டிப்பா இந்த மாதிரியான விஷயங்களில் கூடவே இருப்பேன். 3 மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் சாகர். அவரது நோயை குணப்படுத்த கோவில்கள், மருத்துவமனை என்று என்ன எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் மீனா செய்தார்" எனக் கூறியிருந்தார்.

மேலும் அவர் கூறுகையில் "எப்போதும் குழந்தைத்தனமாக சிரிச்சுக்கிட்டே இருக்கும் மீனாவை இப்படி என்னால் பார்க்க முடியவில்லை. வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சினை இருந்திச்சு, கொரோனாக்கு அப்புறம் தான் அவருக்கு நுரையீரல் பிரச்சனை வந்ததே தெரிய வந்திச்சு. மீனாவும் சாகரும் அவங்கவங்க வேலையில அழகா விட்டுக்கொடுத்து செய்வாங்க. மீனா எனக்கு மட்டும் ஏன் சேச்சி இப்படி நடக்குதுன்னு எங்கிட்ட கேட்ட அந்த ஒரு வார்த்தையை என்னால தாங்கிக்க முடியல. ஒரு பிரண்டா மீனாவுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்வோம்" என மீனா பற்றி உருக்கமாக பேசியுள்ளார் கலா மாஸ்டர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement