• Sep 20 2024

ஜீவாவிடமும் தனது அம்மாவிடமும் கத்தி சண்டை பிடித்த மீனா- ரீட்மென்டுக்கு கிளம்பிய தனம்- கவலையில் இருக்கும் மூர்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

மீனாவிடம் ஜீவா எதுக்கு உங்க வீட்டுக்காரங்க கிட்டை என்னை கோர்த்து விட்டு வந்த என்று கேட்கின்றார். அதற்கு மீனா நான் உங்க வீட்டில இருக்கிறவங்களை சமாளிக்கிறேன் தானே அது மாதிரி நீயும் சமாளிச்சுக்கோ, நான் என்ன சின்னப்பிள்ளையா எப்ப பார்த்தாலும் என்கிட்ட கேள்வி கேட்டிட்டே இருக்கிறீங்க என்று கேட்கின்றார்.


இவ்வாறு மீனா சண்டை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த அவரது அம்மா உள்ளே வருகின்றார்.என்னடி சத்தம் கேட்குது என்று வர மீனா அவரது அம்மாவையும் திட்டுகின்றார். யாரும் என்கிட்ட இனிமேல் எதுவும் கேட்கக் கூடாது என்று சொல்ல இருவரும் பயந்து போய் நிற்கின்றனர். மறுபுறம் தனம் மூர்த்தியின் அருகில் துாங்க வேண்டும் என இரு பிள்ளைகளையும் கூட்டிட்டு வந்து உட்காருகின்றார்.

நாளைக்கு ஊருக்கு போறேன் அதான் உங்க கூட துாங்கலாம் என்று வந்தேன் என்று சொல்ல,மூர்த்தி எனக்கும் நீ இல்லாமல் இருக்க கஸ்டமாக இருக்கும் என்று சொல்ல தனம் நான் இல்லை என்றால் என்ன உங்களை பாண்டியன் பார்த்துப்பான். அவனை நீங்க பத்திரமாப் பார்த்துக்கோங்க என்று சமாதானப்படுத்துகின்றார்.

பின்னர் மீனாவிடம் ஜீவா நாளைக்கு நீ போனதும் இந்த வீட்டில தனியாக இருக்க ஒரு மாதிரி இருக்கும் என்று சொல்ல மீனா ஆறுதல்ப்படுத்தி இருவரையும் துாங்க வைக்கின்றார். விடிந்ததும் மூவரும் திருச்சிக்கு போக ரெடியாகி எல்லோர் கிட்டையும் பேசிட்டு இருக்கின்றனர். அப்போது கண்ணன் நீங்க மூன்று பேரும் எதுக்காக தனியாக போகனும் என்று அடம்பிடிக்கிறீங்க என்று கேட்க, மீனா நாங்க தைரியமான பொண்ணுங்க என்று இந்த உலகத்திற்குக் காட்ட வேண்டாமா என்று சமாளிக்கின்றார். பின்பு மூவரையும் கவனமாக போய்ட்டு வரச் சொல்கின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement