விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதன்படி குறித்த ப்ரோமோவில், முத்துவின் தம்பி ரவி செய்த திருமணத்தால் குடும்பத்தில் பெரிய பிரச்சனையே வெடித்துள்ளது.
ஏனென்றால் மீனா தான் அந்த திருமணத்தை நடத்தினார் என முத்து மற்றும் மாமியார் இருவரும் அவரை வீட்டை விட்டே வெளியேற்றிவிடுகின்றனர்.
இதையடுத்து முத்துவை சந்திக்கச் சென்ற மீனா மீண்டும் அவரிடம் உருக்கமாக பேசுகிறார். ஆனால் முத்து அதை கேட்பதாக இல்லை. எனினும், உங்களுக்கு நான் இல்லனா தெரியும் என அழுது கொண்டே செல்கிறார் மீனா.
அதன் பின் முத்து பாருக்கு சென்றுகுடிக்க, அருகில் இருந்த ஒருவர் 'பொண்டாட்டிட்ட யாரும் சண்டை போடாதீங்க, நல்லா பேசிட்டு இருந்தா, திடிர்னு பான்ல தூக்கு மாட்டிட்டா..இப்ப எல்லாம் பழிவாங்கனும் என்டே தற்கொலை செய்றாங்க' என்று கூறுகிறார்.
அதை கேட்டு முத்துவுக்கு மீனா பேசியது நினைவுக்கு வருகிறது. மீனா ஏதும் விபரித முடிவு எடுக்க போகிறார் என அப்போது தான் முத்துவுக்கு தோன்றுகிறது.
Listen News!