• Sep 20 2024

ரோகினியின் அம்மாவை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் மீனா- தாலி கோர்க்கும் பங்சனுக்கு வரும் ரோகினி- நடக்கப் போவது என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்பொழுது மனோஜின் கல்யாண வீட்டிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது.


இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ரோகினியின் அம்ம, ரோகினியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்து கல்யாணத்திற்கு தன்னால் முடிந்த உதவி என பணத்தை கொடுத்து விட்டுச் செல்கின்றார். 

அப்போது வீதியில் ரோகினியின் அம்மாவைப் பார்த்த மீனா பாட்டி வீட்டிற்கு வந்திருக்கிறாங்க நீங்க வீட்டுக்கு வந்தால் ரொம்ப சந்தோஷப்படுவாங்க, வாங்க என ரோகினியின் அம்மாவை முத்து வீட்டுக்கு கூட்டிட்டு போகின்றார்.


அங்கே மீனாவின் தாலி பிரிச்சுக் கோர்க்கும் பங்சனுக்கு ரோகினியும் வருகின்றார். இதனால் ரோகினி தனது அம்மாவை முத்து வீட்டில் பார்த்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement