• Sep 20 2024

தனத்திற்கு புற்றுநோய் என முல்லையிடம் சொன்ன மீனா- அதிர்ச்சியில் உறைந்த கதிர்- காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட கண்ணன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

மூர்த்தி வெளியில் இருந்து கொண்டு  கண்ணன் லஞ்சம் வாங்கியதை நினைத்து அழுது கொண்டிருக்கின்றார். அவனை சரியாத் தானே வளர்த்தோம். ஆனால் அவன் ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கிறான் என்று கவலைப்பட்டு அழுது கொண்டிருக்கின்றார். அப்போது ஜீவாவும் கதிரும் மூர்த்தியை சமாதானப்படுத்துகின்றனர்.


தொடர்ந்து விடிந்ததும் கிச்சனில் தனம் சமைத்துக் கொண்டிருக்க கண்ணன் தனத்தின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கின்றார். அண்ணி நீங்க என்னை சரியாத் தான் வளர்த்தீங்க நான் தான் தப்பு பண்ணிட்டு இருக்கிறேன். இனிமேல் இந்தத் தப்பை பண்ண மாட்டேன் என்று சொல்லி கதறி அழ கதிர் கண்ணனை சமாதானப்படுத்துகின்றார்.

பின்னர் தனத்தின் அண்ணா வந்து தனத்திடம் ஹாஸ்பிட்டலுக்கு போறனியா என்று கேட்க தனம் முதலில் பயப்பிடுகின்றார். அவர் செக்கப்புக்கு போறதா என்று கேட்ட போது தான் தனம் சந்தோஷப்படுகின்றார். அப்போது தனம் எனக்கு 1லட்சத்து 70 ஆயிரம் பணம் வேணும் உன்னால தர முடியுமா கொஞ்சம் அவசரம் என்று கேட்க அவரும் சரி தருகிறேன் என்று சொல்லி தனத்தை சமாதானப்படுத்தி விட்டுச் செல்கின்றார்.

தொடர்ந்து வீட்டுக்கு வந்த மீனா தனத்திடம் எப்போ ஹாஸ்பிட்டலுக்கு போய் ரீட்மென்ட் ஆரம்பிக்க போகின்றோம். எப்போ வீட்டை இதை பற்றி சொல்ல போறீங்க என்று சொல்ல, தனம் புது வீட்டுக்கு போனதுக்கு அப்பிம் போயிக்கலாம் என்று சொல்ல மீனா இப்போதைக்கு நாம அங்க போகப் போற மாதிரி தெரில வீட்டி சொல்லிடலாம் என்று சொல்ல தனம் வேணாம் நானே சொல்லிக்கிறேன் என்று சொல்கின்றார்.


அப்போ மீனா நீங்க சொல்லல என்றால் நானே சொல்லிடுவேன் என்று சொல்ல அந்த நேரம் முல்லை வந்து கேட்க அக்கா கிட்ட என்ன என்று நீங்களே கேளுங்க என்று சொல்லி விட்டு மீனா அங்கிருந்து கிளம்பி வீதி வீதியாக புலம்பிக் கொண்டே வருகின்றார். மீனா புலம்பிக் கொண்டு வருவதைப் பார்த்த கதிர் அதிர்ச்சியடைகின்றார் இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

இதனை அடுத்து நாளைய தினம் ஒளிபரப்பப்படவுள்ள எப்பிஷோட்டிற்கான ப்ரோமோ வெளியானது அதில் முல்லை மீனாவிடம் சென்று விசாரிக்க மீனா அக்காவுக்கு மார்புப் புற்று நோய் என்று சொல்ல முல்லை அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement