சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கி பின்னர் வளர்ந்ததும் கதாநாயகியாக நடித்து குறுகிய காலத்திற்குள்ளேயே முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.
இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார்.
இவ்வாறு பல படங்களிலும் பிஸியாக நடித்து வந்த மீனா வித்யாசாகர் என்பவரை 2008 -ஆம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். கடந்த ஆண்டு வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த சிகிச்சை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கணவரை இழந்த வலியில் இருந்து வரும் மீனா, அந்த வலியில் இருந்து மீண்டெழுவதற்காக தற்போது தோழிகள் மற்றும் அவரின் மகளுடன் அதிகளவில் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் மீனா குறித்த மற்றோர் தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது.
அதாவது மீனா திருமணம் செய்வதற்கு முன்பு பிரபல ஹிந்தி நடிகர் ரித்திக் ரோஷனை உருகி உருகி காதலித்து வந்தாராம். மீனா தன் காதலை அவரிடம் வெளிப்படுத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாராம். ஆனால் அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ரித்திக் ரோஷன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் கொண்டாராம்.
இதனால் மீனா தன் காதல் ஆசையை ரித்திக் ரோஷனிடம் வெளிப்படையாக சொல்லாமல் கடைசி வரை மனதுக்குள் வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
Listen News!