• Sep 20 2024

அதிகாலையிலேயே முத்து செய்த காரியத்தால் சந்தோஷத்தில் இருக்கும் மீனா- மறைந்து நின்று பார்த்த அண்ணாமலை

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் புதிதாக ஆரம்பித்தாலும் விறுவிறுப்புக்கும் சுவாரஸியத்திற்கும் பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.இதில் அண்ணாவுக்கு பார்த்திருந்த பெண்ணை தம்பி  சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்து கொள்கின்றார்.இதனால் ஆரம்பத்தில் இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர்.

இதனை அடுத்து தற்பொழுது இருவரும் சண்டை போட்டாலும் ஒற்றுமையாக இருக்க ஆரம்பித்துள்ளனர்.முத்து தனது பாட்டி வீட்டில் மீனாவுடன் ஜாலியாக இருக்கும் நேரத்தில் முத்து புதிய பிரச்சினையில் சிக்கி தற்பொழுது அதில் இருந்து மீண்டுள்ளார்.


இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் முத்து வேலைக்கு போக முதல் மீனாவை எழுப்பி நீ வாசலில் தண்ணீர் தெளிச்சு கோலம் போட்டாப் பிறகு தான் சவாரிக்கு போகனுமாம். அப்ப தான் நல்லது நடக்குமாம் என்று கூற மீனாவும் தண்ணீர் தெளிச்சு கோலம் போட லேட்டாகுது என்று தானே முத்து கோலத்தை போடுகின்றார்.

முத்துவின் இந்த செயலால் மீனா சந்தோஷமடைய அண்ணாமலையும் சந்தோஷமடைகின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement