• Sep 20 2024

பிரசாந்த் பற்றிய எல்லா உண்மைகளையும் அறிந்த மீனா- ஜீவா கேட்ட கேள்வி- அதிர்ச்சியில் உறைந்த தனம்- Pandian Stores Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கண்ணன் வந்து ஹாஸ்பிட்டலில் மீனாவிடம் ஜீவாவை எப்படி ஜாமீனில் எடுப்பது என்று பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார். இருந்தாலும் மீனா ஜீவாவுக்கு நீங்க எல்லோரும் இருக்கிறீங்க எங்க அப்பாவுக்கு தான் யாருமில்லையே நான் எங்க அப்பா கூட தான் இருக்கனும் என்று சொல்கின்றார்.அப்போது பிரசாந்த் மெல்லமாக அவருடைய அப்பா ரூமுக்குள் போவதை மீனா பார்த்து விடுகின்றார்.


இதனால் தானும் உள்ளே ஓடிப் போகின்றார். அப்போது பிரசாந்த் மாமா எப்படி இருக்கிறார் என்பதைப் பார்க்க வந்ததாகச் சொல்கின்றார்.இதனால் மீனா சந்தேகப்படுகின்றார்.மறுநாள் விடிந்ததும் கோட்டிற்கு ஜீவாவும் கதிரும் அழைத்து வரப்படுகின்றனர். அங்கு பிரசாந்த் ரெடி பண்ணிய பொய்ச்சாட்சிகள் கதிரும் ஜீவாவும் தான் கொலை பண்ணியதாக சொல்கின்றனர்.

இதனால் இவர்களின் வழக்கு சரியான ஆதாராம் இல்லாததால் தள்ளுபடி செய்யப்படுகின்றது. பின்னர் வெளியில் வந்ததும் எல்லோரும் கதிர் மற்றும் ஜீவாவிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜீவா மீனா எங்கே என்று விசாரிக்கின்றார். அதற்கு தனம் அவ அவங்க அப்பாவ பார்க்க யாரும் இல்லை என்று அங்க இருக்கிறா என்று சொல்லி சமாளிக்கின்றனர்.


தொடர்ந்து மீனா தன்னுடைய அப்பா ரூமுக்குள் சென்று என்ன நடக்குது என்று தெரில எல்லா உண்மையும் தெரிஞ்ச ஒரு ஆள் நீங்க தான் நீங்க கண் முழிச்சால் தான் உண்மை தெரிய வரும் என்று பேசிக் கொண்டிருக்கின்றார்.அப்போது பிரசாந்த் உள்ளே வருவதைப் பார்த்த மீனா மறைந்து கொள்கின்றார்.

உள்ளே வந்த பிரசாந்த் தனது மாமனாரிடம் உங்களை இப்படி பண்ணினது சின்ன மாப்பிள்ளை ஆனால் உங்க பெரிய மாப்பிள்ளை இப்போ ஜெயிலுக்கு போகப்போறாரு என்று உண்மை எல்லாவற்றையும் உளறிக் கொண்டிருக்க,எல்லாவற்றையும் மீனா கேட்டு அழுகின்றார்.அப்போது பிரசாந்த் ஜனார்த்தனனின் வயரைக் கழட்டி விடப் பார்க்கும் போது அங்கு நேர்ஸ் வந்து பிரசாந்தை என்ன பண்ணுறீங்க என்று கேட்டு வெளியே அனுப்பி விடுகின்றார்.


தன்னுடைய அப்பாவின் இந்த நிலமைக்கு பிரசாந்த் தான் காரணம் என அறிந்த மீனா, டாக்டரிடம் சென்று பிரசாந்தை உள்ளே விடாதீங்க ஒரு பிரச்சினை அவர் அடிக்கடி உள்ளே போய்ட்டு வருகின்றார் என்று சொல்கின்றார். அதற்கு அவர்களும் ஓகே சொல்ல இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement