தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார்.
90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.
தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கமலுடன் ஓளவைசண்முகி படத்தில் இணைந்து நடித்திருந்தார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான அந்தப் படம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு வெற்றிப் பெற்றது. படத்தில் நடிக்கும் போது கமலுக்கு இணையாக தானும் திறமையை காட்ட வேண்டும் என நினைத்தே மீனாவும் நடித்தாராம்.
பொதுவாக ஆரம்ப கால கமல் படங்களில் கண்டிப்பாக ஒரு லிப் டூ லிப் கிஸ்ஸிங் சீன் இருக்கும் என்ற ஒரு பிம்பம் இருந்தது. இதனால் அவருடன் நடிக்க பல நடிகைகள் பயப்பிடுவார்களாம்.அதனால் மீனா அவரது அம்மாவிடம் ‘அம்மா அம்மா போய் இயக்கநனரிடம் நீயே சொல்லு, நான் இப்படி பண்ண மாட்டேன், ’ என்று சொல்லி அழுதிருக்கிறார்.
அதற்குள் இயக்குநர் ஷார்ட் ரெடி என்று கத்த பதறி போய் நின்றாராம் மீனா. பின் இங்கே படுங்கள் என்று ரவிக்குமார் சொல்லியிருக்கிறார். மீனாவுக்கு ஒரே பதற்றமாம்.அங்கு இருந்த கமல் வந்தாராம். பக்கத்தில் போய் கிஸ் கொடுக்கிற மாதிரி நடிங்க என்று சொன்னதும் கமல் கிட்ட போய் நெருங்கி ‘இந்த தடவை வேண்டாமே’ என்று சொல்லுவது மாதிரி காட்சியாம். அவ்ளோதான். மீனா துள்ளிக் குதிச்சி எழுந்து விட்டாராம். ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் மீனாவே ரவிக்குமாரிடம் சொல்ல வேண்டும் என நினைத்தாராம்.
நல்ல வேளை கமலே சொல்லிட்டாரு என்று மீனா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அத்தோடு அந்தக் காலத்தில் மீனா எங்கு படப்பிடிப்புக்கு போனாலும் அவரின் அம்மாவும் கூடவே போவது வழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!