• Sep 20 2024

தவறுகளை உணர்ந்து சூர்யாவிடம் மன்னிப்பு கேட்கும் மீனாட்சி, சூர்யாவை நினைத்து மனம் உருகி போகும் வெண்ணிலா..? சாரதாவை நினைத்து அதிர்ச்சியிலிருக்கும் மகாதேவன் ..? விறுவிறுப்பான இறுதி கட்டங்களை நோக்கி காற்றுக்கென்ன வேலி!

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

விறுவிறுப்பான இறுதி கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு சீரியல் தாங்க விஜய் தொலைகாகாட்சியில் ஔிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி சீரீயல், இத் தொடர் வித்தியாசமான  காதல் கதைய கொண்டிருப்பதனால்  ரசிகர் கூட்டமும் அதிகமாகவே இருக்கிறார்கள்.


இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் அபி பற்றிய உண்மை குடும்பத்தினருக்கு தெரிவந்திருந்து, அதனால அபியின் அப்பா அம்மா பெரியம்மா அபியை திட்டுறாங்க,தாம் செய்த  பின்னர் பிழைகளை நினைத்து பார்த்திட்டு சூர்யாவுக்கு கோல்பண்ணி அழுறாங்க மீனாட்சி இந்நிலையில முடிவடைந்தது நேற்றைய எபிசோட்.

இன்றக்கு காற்றுக்கென்ன வேலி சீரியல்ல என்ன  நடக்க இருக்கின்றதென பார்க்கலாம் வாங்க,

மீனாட்சி கோல்பண்ணி சூர்யா சேர வீட்டுக்கு கூப்பிடுறாங்க, அபியை தலைக்குளிக்க வைச்சுட்டு  கோலுக்குள்ள வைச்சு  குடும்பமே திட்டிட்டு இருக்காங்க, அப்போ அபி அம்மா சொல்றாங்க மீனாட்சிட்ட அக்கா சூர்யாக்கு திருப்ப கோல் எடுக்க சொல்ல மீனாட்சி கோல்பண்றாங்க, அந்த நேரம் சூரியா க்ரெக்ட்டா என்றி ஆகிறாரு, சூரியாவ கண்டதும் மீனாட்சி அழுறாங்க, எல்லாமே அபி தான் செய்ததாகவும், வெண்ணிலா மேல தப்பில்ல எண்டு சொல்லியும் அழுறாங்க, சூர்யாகிட்ட சித்தப்பாவும் மன்னிப்பு  கேட்கிறாங்க, சூர்யா அபிட்ட விசாரிக்கிறாரு, எப்பிடி போதை பழக்கம் வந்தது என அப்போது அபி  எல்லா விஷயங்களையும் அண்ணன்கிட்ட சொல்றாங்க பின்னர் தன்னில இருக்கும்  தவறுகளை  சொல்லி தன்னை கொல்ல சொல்லி கெஞ்சி அழுறாங்க அபி, சூர்யா அபிக்கு ஆறுதல் சொல்லிட்டு போதைப்பொருள் கொடுத்த அபியினை தேடி போறாங்க,


அடுத்த கட்டமாக வெண்ணிலா ஜெயில்ல சூர்யாவை நினைச்சு பீல் பண்ணீட்டு உட்காந்திருக்காங்க, கூட இருக்கிற மீனா வெண்ணிலாவுக்கு ஆறுதல் சொல்றாங்க, அந்நேரம் ஜெயிலர் வந்து உன்னுடைய கேஸ் நாளைக்கு கோர்ட்டுக்கு வருது, உனக்கு சாதகமான தீர்ப்பு வராது இங்கதான் திரும்ப வருவாய் என  சொல்லி வெண்ணிலாவ மிரட்டுறாங்க, அடுத்த நகர்வாக மீண்டும் அபிக்கு அவங்க அப்பா திட்டுறாரு அடிக்க போக பானு -அபியின்  அம்மா தடுக்கிறாங்க, இப்பிடி அவங்க வீட்ல ஏகப்பட்ட கலவரம் போய்கிட்டிருக்கு.


அடுத்த கட்டமாக சூர்யாவும் , ஒரு மாணவனும்  அபியை தேடி வீட்டுக்கு  போறாங்க, போதை பொருள் விக்கிற அபிய தலைமறைவாக ஐடியா குடுக்கிறாரு  ஐயா.. சூர்யா அபிட வீட்டுக்கு பக்கதில போய்  மாணவன அபி இருக்கானா என பார்க்க அனுப்பீட்டு வெய்ட் பண்றாரு , இதோட இன்றை எபிசோட் முடியுதுங்க .

அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்போம்.
.

Advertisement

Advertisement