பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சமீபகாலமாக விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.ஜீவா & மீனா ஆகியோர் திருமணத்தில் நடந்த மொய் விவகாரத்தால் மனஸ்தாபமாகி வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர். அது மட்டுமில்லாமல், மீனாவின் தந்தை வீட்டிலும் அவர்கள் இருவரும் குடியேறி உள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து தனது கணவர் கண்ணனை அனைவரும் குற்றம் சுமத்தியதாக அவரது மனைவி ஐஸ்வர்யா சக குடும்பத்தினரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்து கிளம்பி விட்டார். இவருடன் கண்ணனும் கிளம்பிப் போய் விட்டார்.
இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இப்படியான நிலையில் இந்த சீரியலில் மீனாவின் அப்பா ஜனார்த்தனன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் சாய் காயத்திரி இந்த சீரியலில் விலகியது குறித்து கூறியுள்ளார்.
அதாவது அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான். அவ சீரியலில் இருந்து விலகிய பின்பு சொல்லியிருந்தா 10 வருஷமா கிரிக்கெட் விளையாடும் ஒருவரால் புட்போல் விளையாட முடியாது.அதே மாதிரி புட்போல் விளையாடும் ஒருவரால் கிரிக்கெட் விளையாட முடியாது என்றார். ஆனால் ஒரு நடிகரால் புட்போலும் விளையாட முடியும் கிரிக்கெட்டும் விளையாட முடியும். இது அந்த பொண்ணுக்காக சொல்லல.
இனி வருகிறவங்களும் அப்படி நினைச்சிடக்கூடாது நல்ல கரெக்டரில் நடிச்சா நெக்கட்டிவ் ரோலில் நடிக்க முடியாது என்று நினைக்க முடியாது என்பதற்காகத் தான் இதை சொன்னேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!