• Sep 20 2024

மனதை மாற்ற முற்படும் மீனாவின் தந்தை...கதறி அழும் ஜீவா..சவால் விடும் ஜஸ்வர்யா...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டின் ஸ்டோரஸ்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை  பார்ப்போம்....

வீட்டை விட்டு போறேன் என மூர்த்தி சொன்னதும் கண்கலங்கிக் கொண்டு போகதீங்க என கதிர் மூர்த்தியை சமாதானப்படுத்துகின்றார்.அப்படி இருந்தும் விடாப்பிடியாய் நிற்கின்றார் மூர்த்தி.இதைப் பார்த்து கண்கலங்கி அழுது கொண்டு இருக்கிறார் தனம்.இதன் பிறகு ஒரு வழியாக சமாதானம் ஆகிவிடுகின்றார் மூர்த்தி.

இதன் பிறகு மீனாவின் அப்பா ஜீவா தன் பக்கம் வந்துவிட்டது பற்றி பேசிக்கொள்கிறார்.அது பத்தாது என்று மீனாவின் தாயும் பாண்டியன் ஸ்டோரஸ் குடும்பத்தை பற்றிதவறாக பேசிக் கொள்கிறார்.இவ்வாறு இருக்க மாப்பிள்ளை எங்கட பக்கம் இருந்தாலும் மீனா சும்மா இருக்க விடமாட்டாள்.கோவமாக பேசிட்டாய் பொறுமையாக பேசி இருக்கலாம் என பேசிட்டு இருக்கிறா..என தாய் பேசிட்டு இருக்கிறா.இதன் பின் மீனாவையும் கூப்பிட்டு மனதை குழப்புகின்றார் மீனாவின் தந்தை.எவ்வளவு சொல்லியும் கேட்காது மீனாவை திட்டி அவரின் மனதை மாற்ற முற்படுகின்றனர்.


இதன் பின் ஜஸ்வர்யா மற்றும் கண்ணன் பேசிக்கொண்டு இருக்கிறார்.மூர்த்தி மாமா எங்களை மதிச்சதே கிடையாது..நீ அவங்களை பற்றி யோசிச்சிட்டே இருந்தால் போய் அடிவாங்கிட்டு வா..என நக்கலாக கண்ணனை  பார்த்து கூறுகின்றார்.அவரோ அண்ணன் குடும்பத்தை பற்றி யோசிச்சு கொண்டு இருக்கிறார்.எல்லோரும் ஆச்சரியப்படுத்திற மாதிரி குடும்பம் நடத்துவன் என சிரித்துக்கொண்டே சவால் விடுகின்றார் ஜஸ்வர்யா.

அதன் பின்னர் மீனாவிடம் ஜீவா பேசுகின்றார்.வாடகை வீட்டிற்கு போகலாம்..ஏதாவது தொழில் பார்த்து உன்னை காப்பாத்திக்கொள்வேன் எனக் கூற மீனாவும் அதற்கு சம்மதம் தெரிவிக்கின்றார்.அவ்வாறு பேசிட்டு இருக்கும் போது  மீனாவின் அப்பா ஜீவா அமைதியாக இருக்க அவரின் மனதை மாற்றுவது போல பேசிக்கொள்கின்றார்.இது உங்க வீடு..நீங்க இங்கையே இருங்க..நீங்க தான் வசதி ..உங்களுக்கு வேணும் என்றால் வீடு கட்டித்தாரேன் என பலவிதமாக பேசிக்கொள்கின்றார்.நீங்க என்னை அப்பாவா நினைத்து கொள்ளுங்க எனக் கூறியதும் ஜீவா அழுகின்றார்.கண்கலங்காதீங்க நான் இருக்கிறேன் என சொல்கின்றார் மீனாவின் அப்பா.

இவ்வாறு இருக்கும் போது யோசித்துக் கொண்டு இருக்கிறார் மூர்த்தி.அந்த சமயம் கதிர் வருகின்றார்.இருவரும் பேசிக் கொள்கின்றனர்.அத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement