• Sep 21 2024

மூர்த்திக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த மீனாவின் அப்பா- யாரும் எதிர்பார்க்காத பரபரப்பான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதில் சகோதர உறவை மையப்படுத்தி உருவாகிய திரைப்படம் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் தற்பொழுது விறுவிறுப்பான எப்பிஷோட்டுகள் ஒளிபரப்பாகி வருகின்றது. அதன் படி தற்பொழுது சீரியலில்   மூர்த்தியும் அவரது தம்பிகள் எல்லோரும் சேர்ந்து அவர்கள் சொந்த வீட்டை விற்பது என முடிவு செய்கிறார்கள். அந்த வீட்டை தம்பி ஜீவாவின் மாமனார் வாங்கி கொள்வதாக அவரே வந்து கேட்கிறார்.

அதன் பின் ஒருவழியாக மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் வீட்டை அவருக்கே விற்க முடிவு செய்கிறார்கள். அதற்காக ரெஜிஸ்டர் ஆபிஸ் செல்லும் போது தான் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

மூர்த்தி மற்றும் தம்பிகள் எல்லோரும் ரெஜிஸ்டர் ஆபிசில் பாத்திரத்தில் கையெழுத்து போட்டு முடித்தபிறகு, மீனா மற்றும் அவரது அப்பா வருகின்றனர்.

சொத்தை வாங்குபவர் கையெழுத்து போடும்படி கூறியபோது மீனாவிடம் பத்திரத்தை கொடுத்து கையெழுத்து போட சொல்கிறார் அவரது அப்பா. நீங்க மீனாவுக்கு தான் வீட்டை எழுதி தரீங்க என சொன்னதும் மூர்த்தி மற்றும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது.

ஏற்கனவே முல்லையின் அம்மா சொத்தை பங்கு கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மீனாவின் அப்பா இப்படி செய்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.



Advertisement

Advertisement