• Sep 20 2024

தன்னுடன் வரச் சொன்ன ஜனார்த்தனுக்கு மீனா கொடுத்த பதிலடி- சந்தோஷம் தாங்க முடியாமல் இருக்கும் மூர்த்தி- Pandian Stores Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஜீவா தன்னுடையய வீட்டிற்கு வரமாட்டேன் என்று செசான்னதால் ஜனார்த்தனன் நீங்க வரவேண்டாம். இனிமேல் என் பொண்ணு என் கூட தான் இருப்பா, வாம்மா மீனா போகலாம் என்று கூப்பிடுகின்றார். அத்தோடு மீனாவின் அம்மாவும் இவங்க வேணும் என்றால் சேர்த்துப்பாங்க இல்லை என்றால் துாக்கிப் போட்டிடுவாங்க மீனா வா போகலாம் என்று அழைக்கின்றார்.


அப்போது கடுப்பான மீனா ஜீவா இப்பதான் சொன்னான். ஆனால் நான் அந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து சொல்லிட்டு தான் இருக்கிறேன் நம்ம வீட்டுக்கு போவோம் என்று, நான் இந்தப் பொட்டலம் போடுறவனை தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக் கிட்டேன். அவன் கூடவே இங்கையே இருக்கிறேன் நீங்க கிளம்புங்க என்று சொல்கின்றார்.

இதனால் கடுப்பாகி ஜனார்த்தனன் தனது வீட்டுக்கு கிளம்பிப் போகின்றார். ஜீவா இங்கையே இருக்க சம்மதித்ததால் மூர்த்தி சந்தோஷப்படுவதோடு இனிமேல் என்ன பிரச்சினை இந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் நீ இங்கையே இரு ஜீவ என்று கட்டிப் பிடித்து அழ எல்லோரும் அழுகின்றனர். அத்தோடு செம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.


தொடர்ந்து ரூமுக்குள் இருக்கும் போது மூர்த்தி தனத்திடம் சந்தோஷமாக இருப்பதாகவும் எதையோ சாதிச்சமாதிரி இருப்பதாகவும்  சொல்கின்றார். மறுபுறம் கதிரும் துாங்காமல் இருப்பதோடும் தானும் சந்தோஷமாக இருப்பதாகவும் முல்லைகிட்ட ஜாலியாக பேசிட்டு இருக்கின்றார். தொடர்ந்து ஜீவா யோசனையில் இருக்க மீனா கவலைப்படாதடா அதையே நினைச்சிட்டு இருக்காத என்று ஆறுதல்ப்படுத்துகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

தொடர்ந்து வெளியாகிய ப்ரோமோவில் தனம் 4 குழந்தைகளையும் தொட்டிலில் போட்டு விட்டு கயலுக்கு சாப்பாடு ஊட்டுகின்றார்.இதைப் பார்த்த மூர்த்தி கதிர் ஜீவா ஆகியோர் சந்தோஷப்படுவதோடு போட்டோ எடுக்கின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement