சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கனவுகளை அடைய எப்படியெல்லாம் முயற்சிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.
கார்த்திக் அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு சுந்தரியை ஏமாற்றி விட்டார் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரி குடும்பத்திற்கு தெரிய வந்து விட்டது. இருப்பினும் சுந்தரியின் மாமாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க சுந்தரி தன்னுடைய நண்பனான சித்துவுக்கு அவருடைய அத்தை பொண்ணை திருமணம் செய்து வைக்க பல முயற்சிகளைச் செய்து வருகின்றார்.
ஆனால் கார்த்திக் புது பிளான் போட்டு சுந்தரிக்கும் சித்துவுக்கும் இடையில் தவறான தொடர்பு இருப்பது போல காட்டி விட்டார்.இதனால் சித்துவை திருமணம் செய்ய மாட்டேன் என்று அடம்பிடிக்க சுந்தரி போய் நான் என்ன பண்ணனும் என்று சொல்லு பண்ணுறேன் என்று கேட்ட போது சித்து கல்யாணம் பண்ணனும் என்றால் நீங்க இந்த மண்டபத்தை விட்டுப் போகணும் என்கிறார்.
இதனால் சுந்தரியும் சித்துவும் அதிர்ச்சியடைகின்றனர். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!