தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடித் தெரு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார். அதுமட்டுமல்லாமல் நடிகராகவும் களமிறங்கி நான், காளி, பிச்சைக்காரன், சைத்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரின் மூத்த மகள் மீரா மன அழுத்தம் காணமாக விபரீத முடிவெடுத்து நேற்றைய தினம் உயிரை மாய்த்துள்ளார். இதனையடுத்து திரைப்பிரபலங்கள், அரசியல் வாதிகள், மீராவின் பள்ளித் தோழிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் நேரில் வந்து மீராவிற்கு அஞ்சலி செலுத்தி இருந்தனர்.
அப்போது பள்ளித் தோழிகளின் பெற்றோர்கள் மீரா குறித்து ஒரு சில விடயங்களை பகிர்ந்துள்ளனர். அந்தவகையில் அவர்கள் கூறுகையில் "மீரா ஒரு ஆம்பள பையனை போல எப்போதுமே உறுதியாகவும் போல்டாகவும், பேண்ட், ஷர்ட் அணிந்து வருவார். அவ எதுக்குமே கவலைப்பட மாட்டா, மன அழுத்தத்தால் தான் அவ தற்கொலை செய்து கொண்டார் என்பதை இப்பவும் எங்களால் நம்ப முடியல.
மன அழுத்தத்தில் இருப்பவர்களை கூட மீரா ஜாலியாக பேசி ஹாப்பி ஆக்கி விடுவார், அவளுக்கு மன அழுத்தம் இருந்தது என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, பள்ளியில் அவளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருந்தது போல எங்களுக்கு தெரியவில்லை. அப்படி அவளுக்கு ஏதாவது பிரச்சினை இருந்திருந்தாலும் அவள் அதை தனது தோழிகளுடன் பகிர்ந்திருப்பார்" எனவும் மீராவின் பள்ளித்தோழியின் பெற்றோர்கள் கலங்கிய கண்களுடன் தெரிவித்துள்ளனர்.
Listen News!