பிரபல மாடலாகவும் நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை மீரா மிதுன். பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்குகொண்டு பிரபல்யமானவர் தான் நடிகை மீரா மிதுன். இவர் தமிழ் சினிமாவின் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் குறித்து அவதூறாக பேசி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருபவர்.
மேலும் இது தவிர இவர் பட்டியல் இனத்தவர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில் ‘வீடியோ’ வெளியிட்டிருந்தார். இதனால்அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.இப்புகாரினால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14 தேதி மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் இருவரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, புழல் சிறையில் மீரா மிதுன் அடைக்கப்பட்டார்.
சமீபகாலமாக வெளியில் அதிகம் தலைக்காட்டாத நடிகை மீரா மிதுன், தற்போது ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, 6 ஆண்டுகளாக தொடர்ந்து என் மீது வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. எல்லா வழக்கிலேயும் நிரபராதி என்று நிருபித்துவிட்டேன். சில மாதங்களுக்கு முன்பு என் மீது பட்டியலின மக்கள் பற்றி தவறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனால் சிறைக்கு போனேன். எல்லார்கிட்டேயும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். மேலும் எனக்கு இப்போது தற்கொலை எண்ணம்தான் அதிகமாக உள்ளது. எனக்கு தங்குவதற்கு இடமில்லை. வீட்டிலேயேயும் ஏத்துக்க மாட்றாங்க எனக்கு தற்கொலை எண்ணம் அதிகமாக இந்த சமுதாயம்தான் காரணம்.
அத்தோடு சமுதாயம் வாழ விடாததாலதான் சிலர் தற்கொலை பண்ணிக்கிறாங்க. எனக்கும் அந்த எண்ணம் தோன்றுகிறது. எனக்கு தொழிலும் இல்லை வருமானமும் இல்லை. திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்றால் அதற்கும் விட மாட்றாங்க. என்னோடு பழகும் ஆண் நண்பர்களையும் கைது பண்றாங்க. என்னை தரக்குறைவா பேசுறாங்க. அவங்களை எதுவும் சொல்ல மாட்றாங்க.
என்னை எதுவும் பண்ண விட மாட்றாங்க.. என் அப்பா இறந்த பின்னர் தான் எனக்கு இந்த நிலைமை.. என்னாலதான் என் தம்பிக்கு கல்யாணம் ஆகல. தெருவுல அசிங்கமா பேசுறாங்க. இதுக்கு மேல என்னால தாங்க முடியாது. சாப்பிட கூட காசு இல்ல பல நாள் சாப்பிடாம இருந்திருக்கிறேன். நான் வாழ்ந்தா போதும்… என்னை விட்டுடுங்க… எல்லார்க்கிட்டேயும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்… இவ்வாறு கண்ணீர்மல்க பேசியுள்ளார் நடிகை மீரா மிதுன்.
அத்தோடு என்னை வாழ விடுங்க இல்லன்னா தற்கொலைதான் பண்ணிக்கணும். என் போனை சீஸ் பண்ணிட்டாங்க. என்கிட்ட போன் கூட இல்ல. எந்த வேலை கிடைத்தாலும் செய்ய தயார். நானும் ஒரு பொண்ணுதான். முதல் முறை ஜெயிலுக்கு போயிட்டு வந்து எழுந்து நின்னேன். திரும்பவும் அடிச்சாங்க.. விழுந்துட்டேன். என்னால இப்போ எழுந்துக்கூட நிக்க முடியல என தெரிவித்துள்ளார்.
Listen News!