• Sep 20 2024

ஆரம்பமானது மீராவின் இறுதி ஊர்வலம்... தேவாலயத்தில் கண்ணீருடன் காத்திருக்கும் விஜய் ஆண்டனி... மனதை உருக்கும் சம்பவம்...!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் ஆண்டனி பிரபல நடிகர் மட்டுமல்லாது சிறந்த இசையமைப்பாளரும் ஆவார். அவரின் மனைவியும் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருக்கிறார். மேலும் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அவரின் மூத்த மகள் நேற்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


அந்தவகையில்16 வயதான இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அவர் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த சில நாட்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 


இதனையடுத்து இவருக்கும் இவரின் குடும்பத்தினருக்கும் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மீராவின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. மேலும் நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் காலை 9மணி தொடக்கம் மீராவின் உடலுக்கு சிறப்பு திருப்பலி இடம்பெற்று வருகின்றது. விஜய் ஆண்டனி மற்றும் அவரின் குடும்பத்தினர் மீளாத் துயரில் கண்ணீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement