நடிகை நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் தற்பொழுது ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சுற்றுலா சென்றனர்.அங்கு பார்சிலோனா நகரில் நயன்தாராவை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்தார்.
உலகப்புகழ் பெற்ற Sacrada Familia Barcelona தேவாலயத்தில் எடுத்த புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.இது தவிர பார்சிலோனா நகர வீதிகளில் நயன்தாரா உடன் விக்னேஷ் சிவன் கைப்பிடித்து நடந்து வரும் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
மேலும் ஸ்பெயின் போட்டோகிராபர் கெல்மி பில்பாவோ மூலம் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து உள்ளார்.அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் கால்பந்து ரசிகர்களுக்கு பிடித்த நகருக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கே மேட்ரிட் நகர வீதிகளில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.போட்டோகிராபர் கெல்மி பில்பாவோ இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்களுக்கு தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் "மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே " பாடலை பின்னணி இசையாக விக்னேஷ் சிவன் பதிவேற்றி உள்ளார்.
Listen News!